Skip to main content

சிபிஎஸ்சி அலுவலகம் முற்றுகை: மாணவர்களை கடுமையாக தாக்கி போலீஸ் அராஜகம்

Published on 07/05/2018 | Edited on 07/05/2018

 

நீட் தேர்வில் தேர்விற்கு வந்த மாணவர்கள் மற்றும் மாணவிகளிடம் சோதனை என்ற பெயரில் மனஉளைச்சலை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டது மற்றும் தேர்வு எழுதச்சென்ற மாணவனின் தந்தை உயிரிழப்பு போன்ற சம்பவங்களை எதிர்த்து இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் சென்னை திருமங்கலத்திலுள்ள சிபிஎஸ்சி அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இன்று சிபிஎஸ்சி அலுவலகம் நோக்கி சென்றனர்.
 

முற்றுகை போராட்டம் பற்றி செய்தியறிந்த போலீசார் சிபிஎஸ்சி அலுவலகத்திற்கு செல்லும் சாலையிலேயே தடுப்புகளை வைத்து போராட்டக்களர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் தாங்கள் அலுவகத்தின் முன் சென்று தங்களின் போராட்டத்தை நடத்தவேண்டும் என கேட்க போலீசார் மறுத்ததால் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
 

 மேலும் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்த்தும் சிபிஎஸ்சியை எதிர்த்தும் பல கோஷங்களை எழுப்பினர். போலீசார் மாணவர்கள் இடையே நடந்த இந்த மோதலால் அங்கு பரபரபப்பு நிலவியது.
 

அதில் ஒரு போலீஸ்காரர் மாணவர் ஒருவரின் காலை முறிக்கும்படியாக தாக்கினார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் சத்தம் போட்டதும், அந்த போலீஸ்காரர் அங்கிருந்து தப்பினார். மற்ற போலீஸ்காரர்கள் அவரை தப்பவிட்டனர். போராட்டம் நடத்தியவர்களை காலை முறிக்கும் அளவுக்கு  கடுமையாக தாக்க உத்தரவிட்டது யார் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேள்வி மேல் கேட்க போலீசார் அதற்கு பதில் சொல்லாமல், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தரதரவென இழுத்துச்சென்று கைது செய்தது.  

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.