ADVERTISEMENT

கோவையில் சாலை தடுப்புச்சுவரை தாண்டி கார் விபத்து;வெளியான சிசிடிவி காட்சியால் பரபரப்பு

01:00 PM Mar 01, 2019 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோவையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்புசுவரை தாண்டி எதிர்புறம் சென்றுகொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சோமனூரை சேர்ந்த நிஷாந்த் என்ற கல்லூரி மாணவர் சித்ரா பகுதியிலிருந்து காரில் முதலைப்பாளையம் பிரிவு அருகே கோவை-சேலம் தேசியசாலையில் சென்றுகொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாடற்ற வேகத்தில் நிலை தடுமாறி சாலையின் தடுப்புசுவரை தாண்டி எதிரே சூலூரிலிருந்து கோவையை நோக்கி வந்துகொண்டிருந்த ராஜன் என்பவரது காரின் மீது மோதி விபத்தாகியது.

இந்த விபத்தில் இரண்டு காரில் வந்தவர்களும் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டனர். இதில் இரண்டு காரும் அப்பளம் போல் நொறுங்கியது.

அண்மையில் கோவையில் கார் ரேஸில் கல்லூரி மாணவிகள் ஈடுபட்டு விபத்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விபத்து நடந்தபோது பதிவான காட்சிகள் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT