நின்றுக் கொண்டிருந்த கார் மீது அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதிய விபத்தில் பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம், தீதாம்பட்டியில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று வீடு திரும்பிய சுடலைக்கனி என்பவர், காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். கார் பசுவந்தனை பகுதியில் சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நின்றுக் கொண்டிருந்த கார் மீது வேகமாக மோதியது. விபத்தில் நல்வாய்ப்பாக சண்முகம் என்பவர் காயமின்றி உயிர் தப்பினார். இரண்டு கார்களும் சேதமடைந்தனர்.
விபத்து நடந்த பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இதனிடையே, விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.