ADVERTISEMENT

பிராண்ட் அம்பாசிடர் ஆகும் சமந்தா !

01:00 PM Aug 17, 2018 | tarivazhagan

'பிக் சி' என்னும் மொபைல் பேசி விற்பனையக நிறுவனம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பரவலாக விற்பனையகங்களை கொண்டுள்ளது. இதன் கடந்த நிதியாண்டின் வருமானம் 1,015 கோடி ரூபாய் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது மேலும் இந்த நிதியாண்டில் அதை 1,500 கோடி ரூபாயாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளாதாகவும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதுவரை தெலுங்கானாவில் 110 கடைகளும் மற்றும் ஆந்திராவில் 115 கடைகளையும் சேர்த்து 225 கடடைகளை கொண்டுள்ள அந்நிறுவனம், அடுத்த மாதம் தமிழ் நாட்டில் முதல் கட்டமாக 20 கடைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்திற்கான விளம்பரங்களில் இனி சமந்தா நடிப்பார் என்றும் அவர் தான் 'பிக் சி'யின் பிராண்ட் அம்பாசிடர் என்றும் பிக் சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர அடுத்த ஆண்டுக்குள் கர்நாடகாவிலும் தனது விற்பனையகங்களை தொடங்க இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT