அப்போது விளங்கி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் திமுக 10-வது வார்டு உறுப்பினர் சி .கே ராஜன் என்பவர் ஏன் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் துண்டு பிரசுரம் வழங்குகிறீர்கள். யாரிடம் அனுமதி பெற்றீர்கள் எனக் கேட்டுள்ளனர். அதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்தவர்களும் தேசிய வாக்காளர் பேரவை நிர்வாகிகளும், திமுக வார்டு உறுப்பினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒரு கட்டத்தில் அவரை தாக்கியுள்ளனர்.
இதனைப் பார்த்த அருகில் இருந்த சிதம்பர நகராட்சி துப்புரவு பணியாளர் திலகவதி என்ற பெண் தடுத்தபோது அவரையும் தாக்கியுள்ளனர். இதனை அறிந்த திமுகவினர் சம்பவ இடத்திற்கு கூட்டமாக வந்தனர். அப்போது இவர்களிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் காயம் அடைந்ததாக திமுக நகர்மன்ற உறுப்பினர் சி கே ராஜன், துப்புரவு பணியாளர் திலகவதி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த குரு சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துண்டு பிரசுரம் வழங்கிய 3 பேரை சிதம்பரம் காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் காவல் நிலையம் பகுதியில் பதட்டம் ஏற்பட்டு இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. அப்பொழுது காவல்துறையினர் இரு பிரிவினரையும் தடுத்து தனித்தனியே அனுப்பி வைத்தனர். இருப்பினும் சிதம்பரம் நகர காவல் நிலையம் உள்ள மேலரத வீதியில் பதற்றம் நிலவியது.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 6-ந் தேதி சிதம்பரம் புறவழி சாலையில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதா ஆகியோரை ஆதரித்து பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பேச உள்ளார். இந்த நிலையில் மதகலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர். பாஜகவினர் அனைவரிடத்திலும் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு கேட்க உரிமை உண்டு என்கின்றனர்.