Skip to main content

நவீன காலத்தை சமாளிக்க முடியாமல் திணறுகிறது பெரியார் படிப்பகம்!

Published on 03/03/2020 | Edited on 03/03/2020

பல முற்போக்கு சிந்தனையார்களை உருவாக்கிய பெரியார் படிப்பகம் தொடங்கி 30-ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது என்பது அனைவருக்கும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதேநேரத்தில் படிப்பகத்தின் நிலைமை முன்னேற்றமில்லாமல் அதே நிலையில் உள்ளது என்பது பொது நலவாதிகள் மற்றும் சமூக சிந்தனையாளர்ளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

 

Chidambaram - Periyar Library issue

 

 

கடந்த 1988-89-ஆம் ஆண்டுகளில் சிதம்பரம் நகரத்திலுள்ள வெள்ள பிறந்தான் தெருவின் கடைசியில் நகராட்சிக்கு சொந்தமான ஒரு சிறிய இடம் சுகதாரமற்ற நிலையில், யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்துள்ளது. இந்த இடம் பன்றிகள் உலாவும் இடமாக இருந்ததால் பொதுமக்கள் இந்த இடத்தை முகசுளிப்புடன் கடந்து சென்றனர்.  இப்படி அசுத்தமான இடத்தை அப்போதைய திராவிடர் கழகத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி, காபிகடை மூர்த்தி உள்ளிட்டோர் சீர்படுத்தி சில முற்போக்குவாதிகளின் உதவிகளைப் பெற்று அந்த இடத்தில் பெரியார் படிப்பகம் அமைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.

இதனையறிந்த அப்போதைய திமுகவில் இருந்த சிலர் இந்த இடத்தில் கடை வைக்கபோகிறோம் என்று தடுத்துள்ளனர். என்ன செய்வது என்று தெரியாமல் அவர்களை பகைத்து கொள்ளாமல் அப்போது திமுக ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட செயலாளராக இருந்த தற்போதைய திமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும், திமுக முன்னாள் அமைச்சரும், குறிஞ்சிபாடி தொகுதி எம்எல்ஏவுமான எம்ஆர்கே பன்னீர்செல்வத்தின் தந்தை எம்ஆர். கிருஷ்ணமூர்த்தியிடம் காட்டுமன்னார் கோவிலுக்கு அடுத்துள்ள முட்டம் கிராமத்திற்கு படிப்பகம் அமைக்க முயற்சித்த சுந்தரமூர்த்தி உள்ளிட்டவர்கள் 40 கி.மீ தூரம் சைக்கிளில் சென்று சம்பவத்தை விளக்கி கூறியுள்ளனர்.

 

Chidambaram - Periyar Library issue

 



இதனைகேட்ட அவர் எதற்கும் அஞ்சாதீர்கள் படிபகம் அமைக்க அனைத்து ஏற்பாடுகளையும் நானே செய்கிறேன் என்று கூறி அனுப்பியுள்ளார். இதனைதொடர்ந்து தி.க தோழர்கள் அந்த இடத்தில் ஒரு சிறிய ஓலைக் குடிசையை அமைத்தனர். அதனை 30.04.1989 அன்று அவரே திறந்து வைத்துள்ளார். பின்னர் அதில்  விடுதலை உள்ளிட்ட அப்போதைய வெளிவந்த நாளிதழ்கள் மற்றும் வாரஇதழ்கள் வரவழைக்கப்பட்டது.  படிப்பகத்திற்கு ஒரு நாளைக்கு 100 பேர்களுக்கும் குறைவில்லாமல் வந்து நாளிதழ்களை படித்து செல்வது மட்டுமில்லாமல் பெரியாரின் கருத்துகளை பேசியும் படிப்பகத்திற்கு வருபவர்களுக்கு பெரியாரின் சிந்தனைகளை விளக்கியும் உள்ளனர்.

அந்த காலகட்டத்தில் தற்போது திமுகவில் ஆளுமையாக இருக்கும் பொன்முடி, சபாபதி மோகன், மதிமுகவில் இருக்கும் வந்தியதேவன் உள்ளிட்டவர்கள் இந்த படிப்பகம் உருவாக்கத்திற்கு மாணவப்பருவத்தில் உறுதுணையாக இருந்து உதவி செய்துள்ளனர்.  இதனைதொடர்ந்து ஓலைக்குடிசையில் இருந்த படிப்பகம் மழை நேரத்தில் சேதமடைந்து ஒழுகி உள்ளே இருக்கும் நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் நனைந்தது.   இதனையறிந்த சிதம்பரம் பகுதி சமூக ஆர்வலரும் அணி வணிகருமான பழநி உள்ளிட்டவர்கள் உதவி செய்ததன் பேரில் சிமெண்ட் சிலாபில் சுற்றுச் சுவர் அமைத்து அதன்மீது தகர சீட் அமைக்கப்பட்டது. இதனை அனைவரும் வரவேற்றனர்.  இதற்கு உதவி செய்த பழநியை படிப்பகத்திற்கு அழைத்து சந்தனமாலை அணிவிக்க ஏற்பாடுகளை செய்தனர். அவரோ இதனை மறுத்து மரக்கன்று ஒன்று வாங்கிவரச்சொல்லி அதனை படிப்பக வாயிலில் வைத்துள்ளார். அந்த மரம் தற்போது விருட்சமாக வளர்ந்து படிபகத்திற்கு வரும் எல்லாரையும் நிழலில் அமர வைப்பதோடு படிப்பகத்திற்கும் குடைபிடித்த நிழலாக உள்ளது.

இப்படி வளர்ந்த இந்த படிப்பகத்தில் தமிழறிஞர் கி.அ.பெ விஸ்வநாதன், பழ.நெடுமாறன், முன்னாள் அமைச்சர் காளிமுத்து, வி.வி சாமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யா, தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியின் தலைவர் மணியரசன், நாவலர் நெடுஞ்செழியன், தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக உள்ள பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் இந்த படிபகத்திற்கு வருகை தந்து ஆதரவு அளித்ததோடு படிப்பகத்தில் வாசித்துள்ளனர்.

 

​Chidambaram - Periyar Library issue

 



தற்போது இந்த பெரியார் படிப்பகத்தில் விடுதலை உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழான தீக்கதிர், திமுகவின் முரசொலி, மதிமுக சங்கொலி உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் சார்பில் வெளிவரும் நாளிதழ்கள் மற்றும் அனைத்து நாளிதழ்கள் மற்றும் முற்போக்கு சிந்தனை உள்ள வார இதழ்கள் என தினந்தோறும் பல  வருகிறது. காலை 7 மணிக்கு திறக்கப்படும் படிப்பகம் மாலை 5 மணிக்கு மூடப்படுகிறது.  இதில் ஒரு நாளைக்கு 150-க்கும் மேற்பட்டோர்  நேரத்திற்கு தகுந்தார்போல் வந்து பொதுஅறிவு, முற்போக்கு சிந்தனைகளையும் வளர்த்து வருகிறார்கள்.

இப்படி பல சமூக முற்போக்கு சிந்தனையாளர்களையும் அறிஞர்களையும் மெருகேற்றி வளர்த்து வரும்  இந்த படிப்பகம், தற்போது நவீன  டிஜிட்டல் முறைகளை வளர்ந்துள்ள நிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு  எந்த அளவு அடிப்படை வசதிகளை கொண்டுள்ளதோ அதே நிலைமையில் இன்றும் இருப்பது மிகவும் வருத்தமான நிகழ்வாக உள்ளது என்று படிப்பகத்திற்கு வரும் வாசகர்கள் மற்றும் சமூக சிந்தனையாளர்கள் கூறுகிறார்கள்.

இதுகுறித்து தொடக்கம் முதல் படிபகத்தை நிர்வகித்து வரும் படிபகத்தின் செயலாளர் கோ.வி சுந்தரமூர்த்தி கூறுகையில், "அசுத்தமான இடத்தை சீர்படுத்தி 30 ஆண்டுகளை கடந்து இந்த படிபகத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம். பல மாதங்கள் மின்கட்டணமே கட்டமுடியாத சூழ்நிலையில் மின்விசிறியை கழற்றி வைத்துள்ளேன். பல கோயில்களுக்கு இலவச மின் வசதி கொடுக்கிறார்கள். பலரின் அறிவை மெருகூட்டும் இந்த இடத்திற்கு இதுபோன்ற வசதிகள் கிடைக்காமல் இருப்பது வருத்தமாக உள்ளது. இதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தபடிபகத்தின் சிமண்ட் சிலாப்பில் சில கயவர்கள் இயற்கை உபாதை கழித்ததால் ஈரகசிவு உள்ளே வந்துவிட்டது. இதனால் படிப்பகம் வருபவர்கள் மூக்கைபிடித்துகொள்ளும் நிலமைக்கு வந்துவிட்டது. பின்னர் வாசகர்களிடம் சிறு உதவிகளை பெற்று சிமண்ட் வைத்து அந்த இடத்தை சரிசெய்தேன்.

படிப்பகம் அமைப்பதற்கு முன்பு இந்த இடம் எவ்வாறு இருந்ததோ அதேநிலைக்கு சென்றுவிடுமோ என்ற பயமும் உள்ளது. இதனை தொடங்கியதிலிருந்து நல்லது கெட்டதுக்குகூட போக முடியவில்லை. தற்போதுள்ள நிலையில் தகர சீட்டுகளை குரங்குகள் உடைத்துவிடுகிறது. அதனை சரிசெய்ய சிரமமாக உள்ளது. எங்களால் முடிந்த அளவுக்கு நடத்தி வருகிறோம். இந்த 30-வது ஆண்டை போற்றும் வகையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவரது பிறந்த நாள் பரிசாக இந்த படிப்பகத்தை அடுக்குமாடி கட்டிடமாக மாற்றி அனைத்துவகை நூல்கள் கிடைக்கும் வகையிலும். இளம்தலைமுறைகள் வளர்ச்சி அடையும் வகையில் கணினி வசதியுடன் அமைத்து கொடுக்கவேண்டும். இதற்கு திமுக முன்னாள் அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான பன்னீர்செல்வம் மற்றும் திமுகவினர் முற்போக்கு சிந்தனையாளர்கள் பொதுமக்கள் ஆதரவு தந்து புதுபொலிவு பெற உதவிகள் செய்யவேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.