ADVERTISEMENT

டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை..!

11:56 AM Oct 13, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரூர் அருகே தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் நேற்று (12.10.2021) மாலை 5 மணியளவில் கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனை 7 பேர் அடங்கிய குழுவினர் மூலம் நடத்தப்பட்டது.

இச்சோதனையின்போது அலுவலகத்தில் இருந்த டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ரவிச்சந்திரனிடமிருந்து ரூ. 12 ஆயிரமும், ஓட்டுநர் சபரிநாதனிடமிருந்து ரூ. 25 ஆயிரமும், மேற்பார்வையாளர் ராமலிங்கத்திடம் ரூ. 25 ஆயிரம் என மொத்தம் ரூ. 62 ஆயிரம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவத்தால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT