ADVERTISEMENT

நாளையிலிருந்து காலை 05.00 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை என அறிவிப்பு!

06:41 PM Mar 16, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மெட்ரோ ரயில் சேவைகள் நாளை (17/03/2022) முதல் காலை 05.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு நாளை (17/03/2022) முதல் அனைத்து நாட்களிலும் (திங்கள்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை) காலை 05:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

வார நாட்களில் (திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை) மெட்ரோ ரயில் சேவை:

மெட்ரோ ரயில் சேவைகள் வார நாட்களில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை) காலை 05.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை இயக்கப்படும். மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம் போல் நெரிசல்மிகு நேரங்களில் காலை 08.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவை:

மெட்ரோ இரயில் சேவைகள் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 05.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT