ADVERTISEMENT

அதிமுக - பாஜக உறவை யாராலும் பிரிக்க முடியாது! - நமது புரட்சிதலைவி அம்மா நாளிதழ்!

09:11 AM Apr 23, 2018 | Anonymous (not verified)


அதிமுக-பாஜக இடையிலான பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான "நமது புரட்சித் தலைவி அம்மா" தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் அதிகார்ப்பூர்வமான நாளேடான ’நமது புரட்சித் தலைவி அம்மா’வில் திமுக நடத்தும் போராட்டங்கள் காவேரிக்காக அல்ல; மத்திய மாநில அரசுகளின் ஒற்றுமையை சீர்குலைக்கவே எனும் தலைப்பில் எழுதப்பட்டுல்ல கட்டுரையில், எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் அதிமுக - பாஜக உறவை யாராலும் பிரிக்க முடியாது. மத்திய, மாநில அரசுகளின் ஒற்றுமையை எவராலும் சீர்குலைக்க முடியாது.

இந்திய அரசியலில் அதிமுகவும் - பாஜகவும் இரட்டை குழல் துப்பக்கியாக செயல்படுவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டது. அதற்கான பாதை தெளிவாக இருக்கிறது. பயணதிட்டத்தை இரண்டு கட்சிகளின் தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். அதுவே காலத்தின் கட்டாயமாகும் என அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த உறவைக் கெடுக்க நினைக்கும் திமுகவின் திட்டம் பலிக்காது என்றும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT