ADVERTISEMENT
தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் காணொலி வாயிலாக கட்சியினரிடையே உரையாற்றி வருகிறார். தொடர்ந்து அ.தி.மு.க அரசின் மீது விமர்சனங்களை வைத்து வரும் நிலையில் தற்போது அ.தி.மு.க அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
ஆன்லைனில் அரசியல் நடத்தும் தி.மு.கவினரால் மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். மேலும் கணினி போல் செயல்படும் தி.மு.கவிடம் மனு கொடுத்தால் ரசீது தான் தரும். ஆனால் அ.தி.மு.க நேரடியாக பணியாற்றி மக்களிடம் நன்மதிப்பை பெற்று வருகிறது எனவும் கூறியுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments