Skip to main content

பாக்தாத்திற்கும் திமுகவிற்கும் என்ன சம்பந்தம்?- வரலாறு முக்கியம் அமைச்சரே!

Published on 22/08/2019 | Edited on 22/08/2019

விருதுநகரில் நோய்த்தடுப்புத்துறை பணிகள் முன்னேற்றம் மற்றும் குடிநீர் வழங்கல் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட  அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

 What is the relationship between Baghdad and DMK? -

 

“காஷ்மீர் பிரச்சனைக்கும் ப.சிதம்பரம் கைதுக்கும் சம்மந்தம் இல்லை கோர்ட் உத்தரவுபடிதான் சிபிஐ அதிகாரிகள் நடந்துகொண்டனர். விஜய்மல்லையாவும் நீரவ்மோடியும் வெளிநாட்டிற்கு தப்பிசென்றுவிட்டனர்.  ப.சிதம்பரம் இங்குதான் இருந்தார். அதனால், கைது செய்துவிட்டனர். வெள்ளைக்காரன் ஆட்சி காலத்தில் வெள்ளைக்காரனுக்கு இங்கிருந்த சிலர் ஆதரவு தெரிவித்தனர். அதுபோலவே,  இந்தியாவில் இருந்துகொண்டே சிலர் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து பிரிவினையைத் தூண்டிவிடுகின்றனர். மக்கள் அவர்களை ஏற்க மாட்டர்கள்.  

 

 What is the relationship between Baghdad and DMK? -

 

ஜெயலலிதாவைக் கைது செய்தபோது சார்ஜ்சீட் போட்டுத்தான் கைது செய்தார்களா? பழிவாங்கும் வக்கிரபுத்தி ப.சிதம்பரத்திற்குத்தான் உண்டு. கொழுப்பேறிய நாக்கில் திமிராகப் பேசியவர் சிதம்பரம். ஆண்டவன் விடமாட்டான். ஜெயலலிதா தெய்வமாக இருக்கிறார். எங்கள் பிரார்த்தனை வீண்போகாது.  ப.சிதம்பரமா ஜெயித்தார்? அந்தத் தொகுதியில் ஜெயித்தது ராஜகண்ணப்பன். அதிகார துஷ்பிரயோகம் செய்து வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.  அது, அவருக்கு எதிராக தற்போது திரும்பிவிட்டது. ப.சிதம்பரம் கைதால்  திமுகவினர் சந்தோசமாக இருக்கிறார்கள்.   கனிமொழி கைதானபோது மட்டும் அமைதியாக இருந்து விட்டு,  ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டால் மட்டும் மோடியின் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறுவதா? ப.சிதம்பரம் பொருளாதார குற்றவாளி.  இதை ஜெயலலிதா அன்றே கூறிவிட்டார். ப.சிதம்பரம் பேசுவது அனைத்தும் பொய்.  அவர் யாரையும் மதிப்பதில்லை.  ஜெயலலிதா சிறைக்குச் செல்வதற்குக் காரணமாக இருந்தவர். ஆண்டவன் கெட்டவர்களைச் சும்மாவிடமாட்டான்.  

 

 What is the relationship between Baghdad and DMK? -

 

திமுக பாக்தாத் திருடன். யாரிடம் கருத்து கேட்டு கச்சத்தீவை விட்டுக்கொடுத்தார்கள்?  கச்சத்தீவைப் போல் தற்போது காஷ்மீரையும் விட்டுக்கொடுக்கச் சொல்கிறார்கள். இவர்களுக்கு அந்நிய சக்திகளிடமிருந்து பணம் வருகிறது. அதிமுகவே சிறிய கூட்டம் நடத்துவதற்கு திணறுகிறது.  சிறிய கட்சிகள் எல்லாம் பிரம்மாண்டமாக மாநாடுகள் நடத்துகின்றன. இவர்களுக்கு எப்படி வருகிறது பணம்?  இந்தியாவின் நடவடிக்கையைப் பார்த்து உலக நாடுகள் கைகொடுக்கின்றன. அதனால், எதிரி நாடுகள் அச்சப்படுகின்றன. இந்தியா வலுவாகவும், பொலிவாகவும் உள்ளது.  கச்சத்தீவை மீட்க எடப்பாடி நடவடிக்கை எடுப்பார்.” என்றார். 

 

 What is the relationship between Baghdad and DMK? -

 

இருப்பவர்களிடமிருந்து திருடி இல்லாதவர்களுக்குக் கொடுப்பவராக பாக்தாத் திருடனில் நடித்தார் எம்.ஜி.ஆர். பாக்தாத் பேரழகியாக நடித்தவர் ஜெயலலிதா. திமுகவுக்கும் பாக்தாத்துக்கும் என்ன சம்பந்தம்? அமைச்சர் ஏன் மாற்றி சொல்கிறார்? வரலாறு முக்கியம் அமைச்சரே.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்