


Published on 07/06/2021 | Edited on 07/06/2021
தமிழகத்தில் கரோனா பரவல் அனைத்துத்தரப்பு மக்களையும் கடும் பாதிப்படையச் செய்துள்ளது. இந்த நிலையில், மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொண்டு தங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த சூழலில், கரோனா பரவலுக்கு மத்தியில் மக்களுக்காக பணியாற்றும் போக்குவரத்து காவலர்களின் உடல்நலன் காக்கும் பொருட்டு, இன்று(7.06.2021) காலை 11 மணியளவில் ஈகா தியேட்டர் சந்திப்பில், போக்குவரத்து காவலர்களுக்கான மருத்துவ முகாமை கூடுதல் இணை ஆணையர் தொடங்கி வைத்தார்.