நேற்று சினிமா பட விழாவில் கலந்து கொண்டு பேசிய கஸ்தூரி பிடி.செல்வகுமார் கூறியபடி தமிழகத்தில் வளர்ந்தவர்கள் தமிழகத்தை விட்டுக்கொடுக்க கூடாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தமிழ்நாட்டு மாணவர்கள் டெல்லியில் மட்டும்தான் வேலைக்கு செல்கிறார்கள், பதவியை பறித்துக்கொள்கிறார்கள் என்று இல்லை. நாடு முழுக்கவே தமிழர்கள் பணியாற்றுகிறார்கள். காரணம் தமிழர்கள் அறிவாளிகள். அவர்கள் திறமை விஷயத்தில் வேறு மாநிலத்தவர்கள் அடித்துக் கொள்ள முடியாது.இந்த கருத்து பிரகாஷ்ராஜ், கெஜ்ரிவால் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருந்தது.
ADVERTISEMENT
தொடர்ந்து பேசிய கஸ்தூரி மே23-க்கு பிறகு தமிழ்நாடு தான் கிங் மேக்கராக இருக்கப்போகிறது. அதைத் தெரிந்து கொண்டு தான் கன்னடர்கள் சின்ன சின்ன விஷயங்களுக்காக பேச ஆரம்பித்துள்ளனர். நாம் தலை நிமிர நிமிர மற்றவர்கள் பீதி அடையத் தான் செய்வார்கள். தமிழர்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். அதனால்தான் எங்கு போனாலும் அவர்களுக்கு மதிப்பு மரியாதையும் இருக்கிறது. தங்கள் திறமையால் தான் உலகில் எங்கு சென்றாலும் முன்னணியில் இருக்கிறார்கள் மற்றும் வெற்றியும் பெறுகிறார்கள் என்று கூறினார் கஸ்தூரியின் இந்த கருத்து பெரும் பரபரப்பாகியது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments