பிகில் படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் அலுவலகங்களில் தொடர்ச்சியாக வருமானவரித்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், சென்னை அருகே பனையூரில் உள்ள இல்லத்தில் வைத்து நடிகர் விஜயிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
முன்னதாக நெய்வேலியில் நடைபெற்ற மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து விஜய்யை அழைத்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது அவரை பனையூரில் உள்ள வீட்டில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் தற்போதுவரை ஏஜிஎஸ் நிறுவன இடங்களில் மேற்கொண்ட சோதனையில் 25 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
Show comments