ADVERTISEMENT
சமீபத்தில் நடிகர் சிம்புவின் தம்பி குறளரசனுக்கு திருமணம் நடந்தது. இதனைத் தொடர்ந்து சிம்புவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக சமூக வலைத்தளங்களில் நேற்று தகவல்கள் வெளியானது. அது காட்டுத்தீ போல் வேகமாக பரவியது.
ADVERTISEMENT
இந்த நிலையில் இதுதொடர்பாக சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு.
அதில், ''திரையுலகில் பிரபலமாக உள்ள கலைஞர்கள் தினமும் பலரை சந்திப்பது தவிர்க்க முடியாதது. அதை வைத்து அவர்களின் சொந்த வாழ்க்கையை இணைத்து பேசக்கூடாது. கற்பனையான தகவல்களை செய்திகளாக வெளியிட கூடாது. என் திருமணத்தை பற்றி வெளியான தகவல்களில் உண்மையில்லை. அந்த வதந்தியை யாரும் நம்பவேண்டாம். என் திருமணத்தை முன்கூட்டியே நானே அறிவிப்பேன். ரசிகர்களும், பொதுமக்களும் கற்பனையாக வெளியாகும் செய்திகளை நம்பவேண்டாம். எந்த பெண்ணுடனும் இதுவரை எனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்கவில்லை''. இவ்வாறு கூறியுள்ளார்.
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT