ADVERTISEMENT

2ஆம் நாள் சட்டசபை கூட்டத்தொடர் - மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிப்பு

09:24 AM Jun 22, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற நிலையில், திமுக தலைமையிலான புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக அதிமுக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட நிலையில், தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவைக்கான முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று (21.06.2021) தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் வருகின்ற 24ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது. இரண்டாம் நாளான இன்று மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படவுள்ளது. மேலும், மறைந்த திரைப்பட நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ரா, துளசி வாண்டையார் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட இருக்கிறது. அதன்பிறகு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT