Skip to main content

புறக்கணிப்பா ? வெளிநடப்பா ? - பரபரப்பான சூழலில் தமிழக சட்டமன்றம்! 

Published on 05/01/2020 | Edited on 05/01/2020

பரபரப்பான சூழல்களுக்கு மத்தியில் தமிழக சட்டமன்றத்தின் இந்த வருடத்திற்கான முதல் கூட்டத் தொடர், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் நாளை துவங்குகிறது.

கவர்னர் உரை முடிந்ததும் எவ்வித விவாதமுமின்றி முதல் நாள் நிகழ்வுகள் முடிவு பெறும். அதன் பிறகு தனது தலைமையில் நடக்கும் அலுவல் ஆய்வு கூட்டத்தில், சட்டமன்றத்தை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பதை விவாதித்து முடிவெடுப்பார் சபாநாயகர் தனபால். அதிகப்பட்சம் 5 நாட்கள் இந்த கூட்டத்தொடர் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ASSEMBLY

 

செவ்வாய்க்கிழமையிலிருந்து கவர்னர் உரை மீதான விவாதம் நடக்கவிருக்கிறது. இறுதி நாளில், கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு பதிலுரை வாசிப்பார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதில், எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லும் வகையில் அவரது உரை இருக்கும். இப்படிப்பட்டச் சூழலில், குடியுரிமை சட்ட மசோதா, உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், விலைவாசி உயர்வு, ஊழல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சபையில் எழுப்ப திமுக திட்டமிட்டுள்ளது.

அதற்கு பதிலடி தரும் வகையில் மூத்த அமைச்சர்களை தயார் படுத்தியிருக்கிறார் எடப்பாடி. மேலும், மாநகராட்சி மேயர் மற்றும் நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான சட்டத்திருத்தம், புதிய மாவட்டங்களை உருவாக்குதல் தொடர்பான அறிவிப்பு உள்ளிட்ட முக்கிய சட்ட மசோதாக்களுக்கான ஒப்புதலைப் பெறவிருக்கிறது ஆளும் கட்சி. இதற்கிடையே, குடியுரிமைச் சட்ட மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் கொடுத்திருக்கிறார். 

சட்டசபை விதிகள் 172-ன்படி 15 நாட்களுக்கு முன்பாக தீர்மானம் குறித்த கடிதத்தை சபாநாயகருக்கு தர வேண்டும். ஆனால், திமுக கொடுத்துள்ள கடிதம் விதிகளுக்குள் அடங்காததால் குடியுரிமைக்கு எதிரான தீர்மானத்தை சபாநாயகர் எடுத்துக்கொள்ளமாட்டார் என்கிறார்கள் பேரவை செயலக அதிகாரிகள். இப்படிப்பட்ட சூழலில், கவர்னர் உரையை புறக்கணிக்கலாமா? அல்லது கவர்னர் உரையை துவங்கியதும் சில பிரச்சனைகளை வலியுறுத்திவிட்டு வெளிநடப்பு செய்யலாமா? என திமுக தலைமை ஆலோசித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.