ADVERTISEMENT

வேலூரில் 20 போலி மருத்துவர்கள் கைது!

02:26 PM Sep 09, 2019 | kalaimohan

வேலூர் மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் குறித்து அடிக்கடி மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் செப்டம்பர் 8 ந்தேதி, ஒண்டே ஆப்ரேஷன் என்கிற பெயரில் மாவட்டத்தில் 100 இடங்களில் 35 பேர் கொண்ட மருத்துவத்துறையின் சிறப்புப்படை சோதனை நடத்தினர் .

ADVERTISEMENT


மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் யாஷ்மின் உத்தரவின் பேரில் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இதில் திருப்பதூர் - 6, வாணியம்பாடி -3, திம்மான்பேட்டை-3, பேர்ணாம்பட்டு அடுத்த பரந்தராமி-2, சோளிங்கர்-1, ஓட்சேரி-1, காவேரிப்பாக்கம்-1, சுமைதாங்கி-1, இராணிப்பேட்டை பகுதியில்-1 என்கிற எண்ணிக்கையில் போலி மருத்துவர்கள் சிக்கியுள்ளனர் .

ADVERTISEMENT

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் செல்வகுமார், திடீர் சோதனையில் ஈடுப்பட்டபோது திருப்பத்தூர் அடுத்த தோரணம்பதி ஹவுசிங்போர்டு, புத்தாகரம், கந்திலி ஆகிய கிராமப்புற பகுதிகளில் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த சத்தியநாரயணன், குலசேகரன், வெங்கடேசன், மாது மற்றும் ஆனந்தன் ஆகிய 5 பேரை பிடித்து அவர்களிடம் இருந்த மருந்துகள் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் திருப்பத்தூர் கிராமிய காவல்நிலையம் மற்றும் கந்திலி காவல்நிலையத்தில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வகுமார் புகாரின் அடிப்படையில் 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாவட்டத்தில் நடைபெற்ற இந்த சோதனை தகவலை கேள்விப்பட்டு மேலும் பல போலி மருத்துவர்கள் தங்களது கிளினிக்கை மூடிவிட்டு தப்பி ஓடியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT