Skip to main content

மருத்துவமனையில் கவனிப்பேயில்லை -அழும் கரோனா நோயாளி!

Published on 20/06/2020 | Edited on 20/06/2020

 

coronavirus ward

 

வேலூர் மாவட்டம், பொன்னாத்தூர் பேரூராட்சியைச் சேர்ந்தவர் அந்தச் சிறு வியாபாரி. 40 வயதான அவர் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி சி.எம்.சி. மருத்துவமனையில் இறந்துவிட்டார். இறந்தவர் உடலை ஒப்படைக்க 3.5 லட்சம் பணம் பெற்றுக்கொண்ட பின்பே உடலை ஒப்படைத்துள்ளது.

 

அவர் இறந்துவிட்டார் என்றதும், அவரது குடும்பத்தில் உள்ள அவரது மனைவி, 11 வயதான ஒரு மகன், 8 வயதான ஒரு குழந்தை, இறந்தவரின் அம்மா போன்றவர்களைச் சுகாதாரத்துறையினர் அழைத்துவந்து வேலூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனா நோயாளியாக அனுமதித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வந்துவிட்டுள்ளனர். இந்நிலையில் அவர் தனது சகோதரிக்கு போன் செய்து அழுதுள்ளார்.

 

நம் கவனத்துக்கு அந்தத் தகவல் வர அவரிடம் பேசினோம். இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் வச்சியிருந்தப்ப எங்களை நல்லா கவனிச்சிக்கிட்டாங்க அங்கியிருந்த மருத்துவர்களும், நர்ஸ்களும். இங்க அடுக்கம்பாறை வந்தபிறகு எங்களை டாக்டர், நர்ஸ் யாரும் வந்து பார்க்கல. 3 வேளை சாப்பாடு மட்டும் நேரத்துக்கு வருது, மத்தப்படி மருந்து, மாத்திரை எதுவும் தர்றதில்லை.

 

என்னோட மாமியார்க்கு பி.பி. இருக்கு. அதுக்கான மாத்திரையை எடுத்துவராம விட்டுட்டாங்க. நாங்க இங்க வந்ததுலயிருந்து 3 முறை அவுங்களுக்கு மாத்திரை தாங்கன்னு கேட்டுட்டன், தரவேயில்லை. அவுங்களாள முடியலன்னு மாடியிலயிருந்து கீழ இறங்கிவந்து நர்ஸ்கள்கிட்ட மாத்திரை கேட்டால், எதுக்கு கீழ இறங்கி வந்தன்னு சண்டை போடறாங்க என அழுதார்.

 

ரத்த அழுத்தம், சர்க்கரை, இதய நோயாளிகள், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவர்கள், வயதானவர்களை கரோனா பலி வாங்குகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். அப்படியிருக்க வயதான ஒரு பெண்மணி, ரத்த அழுத்தம் உள்ள ஒருவருக்குக் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கரோனா சிகிச்சை தான் அளிக்கவில்லை. ரத்த அழுத்தத்துக்கான சிகிச்சை கூட அளிக்காமல் இருப்பது எந்த விதத்தில் சரி.

 

இதுபற்றி நாம் மருத்துவமனை ஆர்.எம்.ஓ. அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோது யாரும் போனை எடுக்கவில்லை. கரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை எதனால் அதிகரிக்கிறது என்பது இப்போது புரிகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.