Skip to main content

செவிலியர் நாடகமாடி அரை நிர்வாண படம்மெடுத்த பெண்கள் - கூண்டோடு கைது

Published on 21/03/2019 | Edited on 21/03/2019

வேலூர் மாவட்டம் ஆம்பூர் நூருல்லாபேட்டை பகுதில் வசித்து வருபவர் அப்துல் ஆரிஃப். கடந்த ஒரு வருடமாக இவரது தாயார் உடல் நலம் குறைவால் வீட்டில் வைத்து சிகிச்சை அளித்துவருகிறார். அவரை கவனித்துக்கொள்ள மருத்துவ செவிலியர் வேண்டும் என்று பலரிடம் கூறி வந்ததுள்ளார், முகநூலில் பதிவும் போட்டுள்ளார். இதை தெரிந்துக்கொண்டு வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியைச் சேர்ந்த ஹாபிதா என்பவர், சில தினங்களுக்கு முன்னர் அப்துல் ஆரிப்பை செல்போனில் தொடர்பு கொண்டு செவிலியர் ஒருவர் இருப்பதாகவும், நேரில் வந்து விவரங்களை வாங்கிக்கொண்டு அழைத்து செல்லுமாறு பேசி உள்ளார்.

 

nurse

 

இதனை நம்பி அவர் கடந்த சனிக்கிழமை மார்ச் 16ந்தேதி, பெங்களூரிலிருந்து ரயிலில் ஆம்பூர் நோக்கி வந்து கொண்டு இருந்தார். அப்போது அந்த பெண் மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டு செவிலியரை அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார். இதனை கேட்டு அவர் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் இறங்கி அந்த பெண்ணை தொடர்பு கொண்டு ஆட்டோ மூலம் அந்த பெண் சொன்ன முகவரிக்கு சென்றுள்ளார். அங்கிருந்த அந்த பெண் அவரை வீட்டிற்க்குள் அழைத்து சென்றவர், ஒரு அறையில் அவரை அமர வைத்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த அறைக்குள் 8 பேர் கொண்ட கும்பல் நுழைந்து கத்தி மற்றும் ஆயுதங்களை காண்பித்து அவருடைய ஆடைகள் கழுற்றி அரை நிர்வாணமாக்கி பக்கத்தில் ஒரு பெண்ணை நிறுத்தி செல்போனில் படம் பிடித்துள்ளனர். அந்த படங்களை அவரிடம் காட்டி, எங்களுக்கு பணம் வேணும், நாங்க கேட்கற பணம் கொடுக்காவிட்டால் சமுக வலைதளங்களில் படங்களை வெளியிடுவதாக மிரட்டி உள்ளனர். 

 

nurse

 

அப்போது அவர் உயிருக்கு பயந்து தன்னிடம் இருந்த 4 ஆயிரத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். மேலும் அவர் வைத்திருந்த 5 வங்கிகளின் ஏ.டி.எம் கார்டுகளை பறித்து அதன் ரகசிய எண்னை மிரட்டி வங்கிய பின்னர் அவரை அறையில் பூட்டி வைத்துவிட்டு, அந்த அந்த ஏ.டி.எம் கார்டுகளை எடுத்து சென்ற அந்த கும்பல் வாணியம்பாடி சி.எல் சாலையில் உள்ள ஒரு நகை கடையில் ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தி ரூ.2 லட்ச்சத்துக்கான நகைகளை வங்கியுள்ளனர். மேலும் பல்வேறு வங்கி ஏ.டி.எம் கார்டுகளை ஸ்வைப் செய்து 1 லட்சத்துக்கான நகையை வாங்கியுள்ளனர். அதன்பின் வீட்டுக்கு வந்து அறையில் பூட்டி இருந்த தொழில் அதிபரை இரவு 10 மணிக்கு கும்பலின் ஒருவர் ஆட்டோ மூலம் பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது காதர்பேட்டை என்ற இடத்தில் ஆட்டோ வந்த பொது தொழிலதிபர் கூச்சலிட்டுள்ளார். இதனை கேட்ட பகுதி மக்கள் ஆட்டோவை நிறுத்தினர், அப்போது அதல் இருந்த நபர் ஓட முயன்ற பொது பொதுமக்கள் அவரை பிடித்தனர். 

 

nurse

 

கத்தி கூச்சல் போட்ட தொழில் அதிபரிடம் பொதுமக்கள் விசாரித்தபோது, நடந்த விபரத்தை கூறி தன்னை கடத்தி பணம் பறித்ததாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பிடிப்பட்ட நபரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொழில் அதிபர் கொடுத்த புகாரின் பேரில் வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் முரளி தலைமையிலான போலீசார் பிடிபட்ட நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விபரம் தெரிந்து அந்த கும்பல் தலைமறைவானது. தனிப்படை அமைத்து அவர்களையும், அந்த பெண்ணையும் தேடினர். தலைமறைவாக இருந்த இரண்டு பெண்கள் உட்பட 10 பேரை பெங்களுரூ, வாணியம்பாடியில் கைது செய்தனர். ஆபிதா, தாரா, ஷைலாபுதின், நதீம், கோவிந்தராஜ், மனோஜ், அசேன், சதாம்உசேன், இப்ராஹிம், அஸ்லம் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 6.5 சவரன் தங்க நகைகள், 70 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர். கைது செயப்பட்டவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்துள்ளனர். 

 

nurse

 

அவர்களை கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்தால் இதுப்போல் இந்த கும்பல் இன்னும் எவ்வளவு பேரை ஏமாற்றியுள்ளது என்பது தெரியவரும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.