ADVERTISEMENT

12 வயது மாணவியை 3 மாதமாக பலாத்காரம் செய்த முதல்வர் - ஆபாச படம் எடுத்து மிரட்டல்

05:10 PM Sep 21, 2018 | rajavel



12 வயது மாணவிக்கு அடிக்கடி வயிற்று வலி வந்ததால் அவரது பெற்றோர் மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவர் பரிசோதித்ததில் உங்கள் மகள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்ததும் பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக மாணவியிடம் பெற்றோர் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு, மாணவி படிக்கும் பள்ளியின் முதல்வர் மற்றும் பள்ளியின் கணக்காளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

பீகார் மாநிலம் பாட்னாவில் ராஜ்சிங்கானியா என்பவர் தனியார் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். அந்தப் பள்ளியில் அவரே முதல்வராகவும் உள்ளார். இந்தப் பள்ளியில் பாதிக்கப்பட்ட மாணவி படித்துள்ளார். இந்த மாணவியை மட்டும் அடிக்கடி முதல்வர் தனது அறைக்கு அழைத்து, வீட்டுப்பாடம் சரியாக செய்திருக்கிறாரா? கையெழுத்து சரியாக வருகிறதா என ஆய்வு செய்துள்ளார்.

அப்படி வரும்போது நாளடைவில் அந்த மாணவியை பள்ளியின் முதல்வர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை கணக்காளர் அபிசேக் குமார் என்பவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

நடந்த சம்பவத்தை வீட்டில் சொன்னால் கொன்றுவிடுவோம். இதோ பார் வீடியோ உள்ளது. இதனை வெளியிட்டால் உங்கள் குடும்ப மானம் போகும். பெற்றோருக்கு அவமானமாக இருக்கும் என்று இருவரும் மிரட்டியுள்ளனர்.

வீடியோவை காட்டி அடிக்கடி முதல்வர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதும், கணக்காளரும் மாணவிக்கு பாலியல் தொந்தரவுகள் கொடுத்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT