ADVERTISEMENT

ரஷ்யாவில் உள்ள 21 தமிழக மாணவர்களை தமிழகம் அழைத்து வர வேண்டும்: தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கடிதம்

08:08 PM May 03, 2020 | rajavel

ADVERTISEMENT


ரஷ்யா - காசான் மாகாணத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் 21 தமிழக மாணவர்களைத் தமிழகம் கொண்டுவர தக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரசாத் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ADVERTISEMENT

ரஷ்யா - காசான் மாகாணத்தில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரியில் தமிழக மாணவர்கள் 21 பேர் படித்து வருகின்றனர், அவர்கள் தற்போது ரஷ்யாவில் ஊரடங்கில் சிக்கித் தவிப்பதாகவும், அவர்களைத் தமிழகம் கொண்டுவர இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, 21 மாணவர்களில் பெயர் மற்றும் அவர்கள் ரஷ்யாவில் உள்ள முகவரியையும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT