Skip to main content

மிசா காலத்தில் குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே நின்றார்களே அப்போது தெரியவில்லையா வாரிசுகள் என்று...! - தமிழச்சி தங்கப்பாண்டியன்

Published on 22/03/2019 | Edited on 22/03/2019

17-வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தென்சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளராக தமிழச்சி தங்கப்பாண்டியன் அறிவிக்கப்பட்டார். நடனக் கலைஞர், இலக்கியவாதி, மேடைப்பேச்சாளர், அரசியல்வாதி எனப் பன்முகம் கொண்டவர் தமிழச்சி தங்கப்பாண்டியன். தமிழச்சி தங்கப்பாண்டியனின் தந்தை தங்கப்பாண்டியன், திமுக எம்.எல்.ஏ-வாக 1989 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் வெற்றி பெற்று பதவி வகித்தவர். நீண்ட காலமாகவே திமுகவின் மீது வாரிசு அரசியல் எனும் விமர்சனங்கள் இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு வாய்ப்பு அளித்ததன்பின் இன்னும் அந்த சொல்லாடல் அதிகாமக ஒலிக்கத்தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் திமுக சார்பில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை மேடையில் வாரிசு அரசியல் குறித்து தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசினார், அவர் பேசியதாவது,

 

thamizhachi thangapandiayan

 


“திமுகவில் இருக்கும் வாரிசுகள் எல்லாம் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதும், அவர்களுக்கு ஏதோ நல்ல விஷயம் நடக்கும்போது மட்டும்தான் உங்கள் கண்களில் படுகிறார்களா. கட்சிக்காக மூன்று தலைமுறையாக திமுகவில் உறுப்பினர்களாக, பரம்பரை பரம்பரையாக திமுகவில் இருப்பவர்கள் போராட்ட காலங்களில் சிறைக்கு செல்லும்போதெல்லாம், அவர்களுடைய வாரிசுகளாகிய நாங்கள் எவ்வளவு துன்பதுயரத்திலே இருந்தோம் அப்போதெல்லாம் பத்திரிகைகளும், இன்று எங்களை வாரிசு அரசியல் என்று சொல்பவர்களும் ஏன் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. 
 

என் தந்தை மிசா காலகட்டத்தில் ஒரு வருடம் சிறையில் இருந்தார். அப்போது நானும் என் தம்பியும் பள்ளிக் குழந்தைகள். நம்முடைய கழகத் தலைவர் ஸ்டாலின் உட்பட, மாநிலம் முழுவதும் உள்ள அத்துனை பேரையும் சிறையில் அடைத்துவிட்டார்கள். அதேநேரம் அவர்களை சிறையில் அடித்து துன்புறுத்துகிறார்கள் என்ற செய்திகள் மட்டும் வந்துகொண்டு இருக்கிறது. ஆனால் அவர்கள் எந்த சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. அந்தசமயத்தில் என்னுடைய தாய் இரண்டு குழந்தைகளுடன் மதுரை ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே  நின்றார். அவர் மட்டுமின்றி அன்று சிறையில் இருந்தவர்களின் குடும்பத்தினர்கள் அவர்கள் வாரிசுகளுடன்தான் ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே நின்றிருந்தனர் அப்போது யாரும் இந்தக் கேள்வியை கேட்கவில்லை. 
 


மிசா காலகட்டத்தில் உறவினர்கள், நண்பர்கள் என யாரும் வீடுதேடி வரமாட்டார்கள். நீங்கள் தனித்துதான் விடப்படுவீர்கள். ஒரேயொரு தலைவர், ஒரேயொரு உறவு எனக்குத் தெரிந்து, மிசா காலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தொண்டர்களின் குடும்பம் மளிகை சாமான் வாங்குவதற்குக்கூட கஷ்டப்படுகிறார்கள் என்று அந்த தலைவர் மளிகை சாமானோடு தொண்டர்களின் வீட்டுக்கு சென்றார். அவர் ஒப்புயர்வற்ற, தமிழினத்தலைவர் கலைஞர். ஒவ்வொருவர் வீட்டுக்கும் சென்று ஆறுதல் தந்தார். அவருக்கும் அந்த குடும்பத்திற்கும் நாங்கள் பரம்பரை பரம்பரையாக விஸ்வாசமாகத்தான் இருப்போம்.
 

என்னுடைய வளைகாப்பு நிச்சயக்கப்பட்டுவிட்டது. அந்த நிகழ்ச்சிக்கு என்னுடைய தந்தையால் வரமுடியவில்லை. என் தந்தையுடன் எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான ஒரு உறவு உண்டு. ஒரு பெண்ணின் முக்கியமான அந்த நிகழ்வில் என் தந்தையால் பங்கேற்க முடியவில்லை. அவர் அப்போது கழகத்தினால் அறிவிக்கப்பட்ட போராட்டாத்தில் ஈடுபட்டு சிறையில் இருக்கின்றார். அந்த வளைகாப்பு நிகழ்ச்சியினை தென்னரசு பெரியப்பாதான் தந்தை இடத்தில் இருந்து நடத்தினார். இப்படி பெருமையோடுதான் அனைத்து போராட்டங்களுக்கும் செல்லுவோம். திமுகவின் அனைத்து மாநாடுகளுக்கும் குடும்பம் குடும்பமாக சென்று அமர்ந்திருப்போம். 
 


தலைவர் கலைஞர் அவர்கள் காவிரிப்பூம்பட்டினத்தில் சிலப்பதிகாரத்திற்கு கூடம் அமைத்தபோது நாங்கள் அத்துனைபேரும் பள்ளிக் குழந்தைகள். அப்போது குடும்பத்தோடு சென்று அந்த மூன்று நாள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டோம். இப்படி எல்லாவாரிசுகளும் அந்த இயக்கத்திற்கு கடமைப்பட்டவர்கள்தான்.” 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.