ADVERTISEMENT

ஆளுநரின் அதிகாரத்தில் கைவைக்கும் தமிழக அரசு - புதிய மசோதா தாக்கல் 

11:23 AM Apr 25, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய வழிவகை செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதுவரை, கவர்னர் நியமிக்கும் மூன்று பேர் கொண்ட தேடுதல் குழுவின் பரிந்துரையின் பேரில் துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டுவந்த நிலையில், இந்த மசோதா அதனை மாற்ற வழிவகை செய்யும். இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை மாநில அரசு நியமனம் செய்யமுடியும். தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் துணை வேந்தர்களை நியமனம் செய்யும் உரிமை மாநில அரசுகளுக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT