Skip to main content

ஆதார் கட்டாயம்... இனி தேர்வு மையத்தை தானே தேர்ந்தெடுக்க முடியாது...-டிஎன்பிஎஸ்சி தேர்வில் அதிரடி மாற்றங்கள்!

Published on 07/02/2020 | Edited on 07/02/2020

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமாகி முறைகேட்டுக்கு தொடர்பானவர்களை சிபிசிஐடி போலீசார் தொடர்ச்சியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இனி நடக்கவிருக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி தமிழக அரசுத் தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி நடத்திய பெரும்பாலான தேர்வுகளில் நம்பகத்தன்மை குறைந்திருக்கிற இந்த சூழலில் குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு பிறகு அது சார்ந்த சீர்திருத்தங்களை மேற்கொள்ள போவதாக தமிழக அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

 

 Aadhaar is mandatory ... no longer selects the selection center itself ...- Action changes to the TNPSC exam!

 

தற்பொழுது முக்கியமான சீர்திருத்தங்களை டிஎன்பிஎஸ்சி கொண்டு வந்திருக்கிறது. அதில் புதிய மாற்றமாக மூன்று விஷயங்களை சேர்த்துள்ளனர். ஒவ்வொரு தேர்வு நடைமுறைகளும் முழுமையாக நிறைவடைந்த பிறகு அந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒவ்வொருவருடைய விவரமும், அனைத்து விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

அதன் தொடக்கமாக 181 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட 2019 குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற 181 தேர்வர்களின் அனைத்து விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவித்திருக்கிறார்கள்.

அடுத்ததாக, தேர்வு நடவடிக்கைகள் அனைத்துமே முடிவடைந்த பிறகு எழுத்துத்தேர்வு ஓஎம்ஆர் தாள் நகலை தேர்வர்கள் பெறமுடியும். அதற்கான உரிய கட்டணம் எவ்வளவு என்று பின்னர் அறிவிக்கப்படும். அந்த கட்டணத்தை செலுத்தினால் உங்களுடைய ஓஎம்ஆர் அதாவது, விடைத்தாளை பெற முடியும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.  இந்த நடைமுறை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Aadhaar is mandatory ... no longer selects the selection center itself ...- Action changes to the TNPSC exam!

 

மூன்றாவது விஷயமாக, கலந்தாய்வு மூலமாக பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஒவ்வொரு பணியிடத்தையுமே தேர்வு எழுதிய பிறகு எந்த பகுதியை தேர்வு செய்கிறார்கள் என்பது கலந்தாய்வு மூலமாகத்தான் உறுதி செய்யப்படுகிறது. அப்படி கலந்தாய்வு நடைபெறும் நாட்களில், அந்தந்த நாட்களின் இறுதியில் துறைவாரியாகவும்,  மாவட்ட வாரியாகவும், இட ஒதுக்கீடு வாரியாகவும் நிரப்பப்பட்ட இடங்கள் மற்றும் காலி இடங்கள் பற்றிய விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுவும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறி இருக்கிறார்கள். 


அடுத்ததாக தேர்வு மையம், இனி தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதக்கூடிய தேர்வு மையத்தை தேர்வரே தேர்வு செய்ய முடியாது. டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு அதிக சிரமம் இல்லாதபடி குறிப்பிட்ட தேர்வரின் வட்டம் மற்றும் தாலுகா அடிப்படையில் மாற்றம் செய்து தேர்வாணையமே அவர்களுக்கு தேர்வு மையத்தை தேர்வு செய்யும் என கூறியிருக்கிறார்கள்.

அடுத்ததாக, ஆதார் என்பதை கட்டாயமாக்கி இருக்கிறார்கள். ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்வதை தடுக்கும் வண்ணம் விண்ணப்பிக்கும்போது ஆதார் எண் அளிப்பது கட்டாயமாக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

டி.என்.பி.எஸ்.சி தேர்வர்கள் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Important announcement on Attention TNPSC Candidates

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதே போல், 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும். 29 பணியிடங்களுக்கான குரூப் 1-B மற்றும் குரூப் 1-C தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெறும். 

2,030 காலி பணி இடங்களுக்கான குரூப்-2, குரூப்- 2A தேர்வு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும். அதே போல், டிப்ளமோ/ ஐடிஐ அளவில் 730 பணியிடங்களுக்கான தொழில்நுட்பப்பிரிவு தேர்வுகள் வரும் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பிற அரசு தேர்வுகளுக்கான தேதிகளையும் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. மேலும், டி.என்.பி.எஸ்.சி.யின் அனைத்து தேர்வுகளுக்கும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது.