ADVERTISEMENT

எப்பிறப்பில் காண்போம் இனி? -கவிஞர் ஆரூர் தமிழ்நாடன்

12:22 PM Aug 07, 2019 | rajavel

கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும், இன்று அவரது நினைவைப் போற்றி வருகிறது. அங்கங்கே கலைஞரின் திருவுவப் படத்தை வைத்து பொதுமக்களும் தி.மு.க.வினரும் மலரஞ்சலி செய்து வருகின்றனர். அதேபோல், முகநூல், வாட்ச்-அப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் இன்று கலைஞரே நீக்கமற நிறைந்திருக்கிறார். கவிஞர் ஆரூர் தமிழ்நாடன், 'எப்பிறப்பில் காண்போம் இனி?' என்ற தலைப்பில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

ADVERTISEMENT




ஒரு நிமிடம் கூட
ஓய்வெடுக்கத்தெரியாத நீ
ஓராண்டாய் என்ன செய்கிறாய்?
.

நீ எழுதவேண்டிய எழுத்துக்கள்
உன் விரல் தேடித்தவிக்க
நீ ஆற்றவேண்டிய பொழிவுகள்
உன் குரல்தேடி அலைகின்றன.

.
நீ தலைமை ஏற்கவேண்டிய
போராட்டங்களும்
வரிசைகட்டி நின்று
உன் கண்ணசைவுக்கு
ஏங்குகின்றன.

.
இப்போதும்
உன் தலைமாட்டில்
காத்திருக்கிறது
ஒரு வருடமாய்
நீ புரட்டாத முரசொலி.

.
என்றாவது ஒருநாள்
ஓரதிசயம் நடக்கும் என்ற
நம்பிக்கையிலும்
உன் முகம் பார்க்கும் ஆசையிலும்
அன்றாடம் வந்து வந்து
உன் காலடியில்
அமர்ந்துவிட்டுப் போகிறார்கள்
உன் உடன்பிறப்புகள்.

.
சூரியத்தலைவனே!
உன்னைக் கிழக்கில்தான்
விதைத்தோம்;
மீண்டும் எழுவாய்
என்ற நம்பிக்கையோடு.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT