nagercoil dmk office kalaignar statue opening ceremony

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம்மேற்கொண்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தும், முடிவுற்றகட்டடங்களைதிறந்து வைத்தும்பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டார்.

Advertisment

செருப்பு அணியக்கூடாது, குடை பிடிக்கக்கூடாது, மீசை வைக்கக் கூடாது, ஆபரணங்கள் அணியக்கூடாது, பெண்கள் மாா்பை மறைக்கக் கூடாது என சனாதனத்தின் பெயரால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் உாிமைபோராட்டங்களுக்கு வித்திட்ட தோள் சீலைப் போராட்டத்தின் 200 ஆம்ஆண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நாகா்கோவிலில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதல்வர்மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisment

இதனைத்தொடர்ந்து நேற்று நாகர்கோவில்மாநகராட்சிக்கு புதிதாககட்டப்பட்ட அலுவலகக் கட்டடத்திற்கு கலைவாணர்பெயர் சூட்டப்பட்டதைத்தொடர்ந்து அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில், கன்னியாகுமரிமாவட்டத்தில் நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில்நிறுவப்பட்டுள்ள எட்டரைஅடி உயரம் கொண்ட கலைஞரின்முழு உருவ வெண்கல சிலையை முதல்வர்மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். அதனைத்தொடர்ந்து கலைஞர்சிலையை சிறப்பாக வடிவமைத்த சிற்பி தீனதயாளனுக்கு தங்க மோதிரம் மற்றும் சால்வை அணிவித்து முதல்வர்மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.