Skip to main content

எடப்பாடியை கண்டித்து திமுக நிர்வாகிகள் திடீர் ராஜினாமா!

Published on 10/08/2018 | Edited on 10/08/2018
dmk


திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் மறைவையொட்டி அவருக்கு மெரீனாவில் இடம் தர மறுத்த எடப்பாடி அதிமுக அரசை கண்டித்து கூட்டுறவு தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட திமுக உறுப்பினர்கள் 4 பேர் திடீர் ராஜினாமா செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே இருக்கும் சேவகம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கான தேர்தல் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் திமுகவை சேர்ந்த ஐந்து பேர் நிர்வாகிகளாக வெற்றி பெற்றனர். இதில் கடந்த மாதம் உடல் நலம் சரியில்லாமல் சத்தியமூர்த்தி இறந்து விட்டார் மீதியுள்ள மாசிலா பெலிப்ஸ், கணேசன், வள்ளிமயில், வள்ளியம்மாள் ஆகிய நான்கு பேர் நிர்வாகிகளாக இருந்தும் கூட பதவி ஏற்பு நடைபெறாமல் இருந்தது.

இந்தநிலையில் தான் எடப்பாடி அரசு கூட்டுறவு தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு நாளை பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தான் வெற்றி பெற்ற திமுகவினர் நான்கு பேர் அப்பகுதியை சேர்ந்த சேவகம்பட்டி திமுக நகர செயலாளர் தங்கராஜ் தலைமையில் கூட்டுறவு சங்கத்திற்கு சென்று அந்த திமுக உறுப்பினர்கள் நான்கு பேரும் திடீரென தங்கள் ராஜினாமாவை அலுவலக அதிகாரியிடம் வழங்கினார்கள்.
 

dmk


இதுபற்றி திமுக உறுப்பினர்களிடம் கேட்டபோது... எங்கள் தலைவர் ஐந்து முறை முதல்வராக இருந்து தமிழை வளர்த்து வந்த எங்க தலைவருக்கு இந்த எடப்பாடி மெரினாவில் இடம் கொடுக்க மறுத்து விட்டார். அதனால் கோர்ட்டுக்கு போய் அனுமதி வாங்கி எங்க தலைவரை மெரினாவில் அடக்கம் செய்து இருக்கிறோம். இப்படி தமிழுக்காக உழைத்த எங்க தலைவனுக்கு இடம் தர மறுத்த இந்த எடப்பாடி ஆட்சியில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் நாங்கள் உறுப்பினாராக இருக்க விரும்பவில்லை என எங்க மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான ஐ.பி.எஸ்சிடம் தெரியப்படுத்தினோம்.

அவரும் சரி என்று சொல்லி விட்டார். அதுனால தான் நான்கு பேரும் ராஜினாமா கடிதத்தை கொடுத்து இருக்கிறோம் என்று கூறினார்கள். இதே போல் அணைப்பட்டி, நிலைக்கோட்டை, வத்தலக்குண்டு உள்பட பல கூட்டுறவு சங்கங்களில் தேர்வு செய்யப்பட்ட அனைத்து திமுக நிர்வாகிகளும் இன்றும், நாளையும் ராஜினாமா கடிதம் கொடுத்து எடப்பாடி அரசுக்கு தங்கள் கண்டனத்தை ராஜினாமா மூலம் வெளிப்படுத்த உள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி; 33வது முறையாக நீட்டித்த நீதிமன்றம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Senthil Balaji featured in the video; Court extended for the 33rd time

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி இன்று காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்பொழுது வரை 33வது முறையாக அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.