ADVERTISEMENT

“இந்திய அரசியல் தலைவர்கள் ஸ்டாலினை பயன்படுத்த வேண்டும்” - டி.ஆர். பாலு

07:25 PM Mar 01, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

“இந்திய நாட்டின் அரசியல் தலைவர்கள் மு.க.ஸ்டாலினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை நந்தனம் மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு தேசிய அளவில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்னை வந்துள்ளனர்.

இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி.யும் நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, “இதுவரை 2019 நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்ற தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என 4 தேர்தலில் முதலமைச்சர் வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார். நாளை வரவுள்ள வெற்றி உங்களுக்குத் தெரியும். திராவிட மாடல் கொள்கை தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் எடுத்துச் செல்லும் அளவிற்கு உள்ளது. இந்திய நாட்டின் அரசியல் தலைவர்கள் மு.க.ஸ்டாலினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்." எனக் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT