Skip to main content

''பொதுக்குழுவுக்கு போக வேண்டாம்...''- உறுப்பினர்களுக்கு ஓபிஎஸ் கடிதம்!

Published on 22/06/2022 | Edited on 22/06/2022

 

'' Do not go to the General Assembly ... '' - OPS letter to members!

 

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை தான் என எடப்பாடி பழனிசாமி தரப்பும், இரட்டைத் தலைமை தான் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் மாறிமாறி அணி திரட்டிக் கொண்டிருக்கும் நிலையில், வரும் ஜூன் 23- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என ஆவடி காவல் ஆணையருக்கு ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் இருதரப்பினருக்கும் இடையே முரண்பாடு உள்ளதால் அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது எனவே பொதுக்குழுவிற்கு அனுமதி தரக்கூடாது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் ஓபிஎஸ்ஸின் அந்த கோரிக்கையை ஆவடி காவல்துறை நிராகரித்துள்ளது. தனிநபருக்கு சொந்தமான உள் அரங்கில் கூட்டம் நடப்பதால் இதில் தலையிட முடியாது என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தை நிராகரிக்க வேண்டும் எனக்கோரி பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஓபிஎஸ் கடிதம் அனுப்பியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்