Skip to main content

கரோனா அதிகரிக்கப்புக்கு காரணமான சீனா நிறுவனத்துக்கு துணைப் போகும் கலெக்டர்!  காங்கிரஸ் எம்.பி.குற்றச்சாட்டு!  

Published on 24/06/2020 | Edited on 24/06/2020
M. K. Vishnu Prasad

 

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களை தொடர்ந்து மேலும் சில மாவட்டங்களில் முழு ஊரடங்களை அமல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் அதிகாரிகள் பலரும் முதல்வர் எடப்பாடியிடம் வலியுறுத்தியுள்ளனர்.

 

இதனடிப்படையில் ஊரடங்கும், மாவட்டங்களுக்கிடையே பொது போக்குவரத்திற்கு தடையும் விதிக்கப்படலாம் என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று வாரங்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என தமிழக முதவருக்கு கோரிக்கை வைத்திருக்கிறார் காங்கிரஸ் எம்.பி. டாக்டர் விஷ்ணுபிரசாத். 

 

அவரிடம் நாம் பேசியபோது, ’’திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு தொகுதியில் இருக்கிறது சிப்காட் தொழிற் பேட்டை!  இந்த சிப்காட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் சைனா மற்றும் தைவான் நாடுகளை சேர்ந்த செருப்பு தயாரிக்கும் நிறுவனங்கள்தான் பிரதானவை. இந்த நிறுவனங்களில் செய்யாறு, ஆரணி, வந்தவாசி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 27,000 பணியாளர்கள் இந்த சிப்காட்டில் வேலை பார்க்கிறார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலுக்கு சிப்காட் வளாகம் மிக முக்கிய காரணியாக இருக்கிறது. கட்டாயப்படுத்தி பணி புரிய வைக்கும் 27 ஆயிரம் தொழிலாளர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. சைனா மற்றும் தைவான் கம்பெனி நிர்வாகம் தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டவில்லை.

 

இது குறித்து, மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் பேசிய நான், கொரோனா பரவலுக்கு காரணம் சிப்காட் வளாகம் தான் . மூன்று வாரங்களுக்கு வளாகத்தை லாக் டவுன் செய்யுங்கள் என வலியுறுத்தினேன். ஆனால், அவர் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. ஒரே ஒரு நாள் நடக்கும் திருவண்ணாமலை கிரி வலத்தால் தொற்று பரவும் என சொல்லி கிரிவலத்துக்கு தடைப்போட்ட கலெக்டர், தொற்று பரவலுக்கு காரணமாக இருக்கும் சிப்காட் வளாகத்தை மூட முயற்சிக்கவில்லை. சைனா மற்றும் தைவான் நிறுவனங்களின் பிஸ்னெஸ் பாதிக்கும் என மாவட்ட நிர்வாகம் கருதியிருக்கலாம். மாவட்ட நிர்வாகத்துக்கும் சிப்காட்டில் உள்ள நிறுவனங்களும் ஏதோ ‘நட்பு’இருக்கிறது.

 

இந்த சூழலில், திருவண்ணாமலை மாவட்டத்தில் தொற்று கட்டுக்கடங்காமல் அதிகரிக்கத் துவங்கி விட்டது. இதனால் மாவட்டத்தையே மூன்று வாரங்களுக்கு லாக் டவுன் செய்தால்தான் தொற்றை குறைக்க முடியும். திருவண்ணாமலை மாவட்டத்தில் தொற்று அதிகரிக்க காரணம் சிப்காட் வளாகமும், அதற்கு துணைப் போகும் மாவட்ட நிர்வாகமும்தான் ! அதனால், சிப்காட் வளாகத்தை இழுத்து மூட வேண்டும் ‘’ என ஆவேசப்படுகிறார். இது குறித்துதான் முதல்வர் எடப்பாடிக்கு கோரிக்கை வைத்திருக்கிறார் டாக்டர் விஷ்ணுபிரசாத் எம்.பி.!

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.