ADVERTISEMENT
ADVERTISEMENT
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் பிப்ரவரி 4 முதல் விருப்பமனுவை அளிக்கலாம் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. விருப்ப மனுவை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி பிப்ரவரி 10. 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோர் விருப்பமனுக்களை அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 23ம் தேதி அதிமுக, தொகுதிப் பங்கீட்டு குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரப் பணிகளை முறைப்படுத்தும் குழு என மூன்று குழுக்களை அமைத்தது, இந்த குழுவில் முறையே 5, 7, 6 என உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். பிப்ரவரி 4 முதல் 10ம் தேதிவரை, காலை 10 முதல் 5 மணிவரை விண்ணப்ப கட்டணம் 25 ஆயிரம் செலுத்தி விண்ணப்பங்களை பெற்று பூர்த்திசெய்து விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT
Show comments