Skip to main content

வெற்றி என்ற இலக்கோடு வேலூர் தேர்தலை அணுகுகிறோம்... ராஜீவ்காந்தி

Published on 19/07/2019 | Edited on 19/07/2019

 

ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ள வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்து கொண்டார் நாம் தமிழர் கட்சியின் ராஜீவ்காந்தி.

 

rajiv gandhi naam tamilar katchi



பணப்பட்டுவடா புகாரால் வேலூர் பாராளுமன்றத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அந்த புகாரில் எந்த நடவடிக்கையும் இல்லை, எந்த தண்டனையும் இல்லை, இந்த தேர்தல் தேவையற்றது என்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோதே சீமான் அறிக்கை வெளியிட்டார். இப்போது தேர்தலில் போட்டியிடுவது எதற்காக என்றால், எங்களுக்கு வாக்களிக்கக்கூடிய மாற்று வாக்காளர்களை மதிக்கிறோம். இந்த இரு கட்சிகளுக்கும் மாற்று நாம் தமிழர் கட்சிதான். அந்த அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுகிறோம். வெற்றி என்ற இலக்கோடுதான் இந்த தேர்தலை அணுகுகிறோம். 


 

 

திமுக, அதிமுகவில் பலமான வேட்பாளர்கள் நிற்கிறார்களே?
 

திமுக, அதிமுகவில் பலமான வேட்பாளர்கள்தான். அவர்கள் பணத்தை நம்பி நிற்கிறார்கள். அதனால் அவர்கள் பலமான வேட்பாளர்கள்தான். நாங்கள் மக்களை நம்பி நிற்கிறோம். அதிமுக கூட்டணி வேட்பாளராக நிற்கக்கூடியவர், ஒரு தனிக்கட்சி நடத்துகிறார். தன் கட்சி சார்பில் போட்டியிடாமல், தனது கட்சியை இன்னொரு கட்சியில் அடகு வைத்து போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெற்றால் பாஜகவுக்கு ஒரு கூடுதல் எம்பியாக இருக்கப்போகிறார். அதேபோல் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றால், திமுகவில் 37 எம்பிக்கள் என்பது 38 எம்பிக்களாக மாறும் அவ்வளவுதான். 
 

கமலின் மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளதே?

அவர்கள் சொல்லும் காரணம் சரியானதுதான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் இதனை தேர்தல் அறிவிக்கப்பட்டபோதே இந்த முடிவை எடுத்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டிருந்தால் அதனை நம்பலாம். கடைசி நேரத்தில் அறிவிக்கிறார்கள். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.