இளம் பெண் ஒருவர் தன் நீண்டகால பெண் நண்பருக்காக ஆணாக மாறி அவரை திருமணம் செய்த நிகழ்வு ஒடிசாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் மங்கல்கிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆயிஷா மற்றும் பானு. இவர்கள் இருவரும் கடந்த 5 வருடங்களாக நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இவர்கள் அதே பகுதியில் உள்ள நிறுவனத்தில் ஒன்றாக வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இதனால் அவர்கள் இருவரில் ஒருவர் ஆணாக மாற சம்மதித்துள்ளனர்.
ADVERTISEMENT
இதற்காக ஆயிஷா தில்லி சென்று சுமார் 5 லட்சம் செலவில் பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். இதற்கு அவர்கள் இருவர் வீட்டிலும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் திருமணம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
ADVERTISEMENT
Show comments