ADVERTISEMENT

சிகரெட்டால் வந்த சோதனை... எரிந்த போலீஸ் ஜீப்... காப்பாற்றிய இளைஞர்கள்!

11:34 AM Oct 17, 2019 | suthakar@nakkh…


குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் நீண்ட நாட்களாக காவல்துறைக்கு சொந்தமான ஜீப் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் சில பேர் கூட்டமாக நின்றுகொண்டு சிகரெட் குடித்துள்ளனர். போலிசார் வந்து அவர்களை எச்சரித்ததும் அவர் அந்த பகுதியை விட்டு வெளியேறி உள்ளார்கள். அவர்கள் சென்ற சிறிது நேரத்திற்கு பிறகு அந்த ஜீப் தீப்பிடித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறை அதிகாரிகள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

ADVERTISEMENT


இந்நிலையில், தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்த அந்த ஜீப்பிற்கு அடியில் சில நாய்குட்டிகள் கத்தியுள்ளது. இதனை பார்த்த அருகில் இருந்த இளைஞர்கள் சிலர் கொழுந்துவிட்டு எரியும் தீயை பொருட்படுத்தாமல் அந்த நாய் குட்டிகளை காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT