air

Advertisment

கொச்சியில் இருந்து புறப்பட்ட இலங்கை விமானம் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் புறப்பட்டவுடன் ஓடுதளத்தை விட்டு விலகி ஓடி விளக்கில் மோதி சேதம் அடைந்தது. உடனடியாக விமானத்தை விமானி நிறுத்தியதால் 227 பயணிகள் காயமின்றி தப்பினர்.

இதன் பின்னர், சக்கரம் சேதம் அடைந்ததை அடுத்து இலங்கை செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டது. மேலும், சேதம் சரி செய்யப்படும் வரை கொச்சி விமான நிலையம் மூடப்பட்டிருந்தது.