ADVERTISEMENT

கால் டாக்ஸி டிரைவர் அளித்த தகவல்; அம்பானி வீட்டில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!

06:40 PM Nov 08, 2021 | rajapathran@na…


ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவின் மிகப்பெரும் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் வீட்டருகே சில மாதங்களுக்கு முன்னர், வெடிபொருட்கள் நிரம்பிய கார் கண்டுபிடிக்கப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் பல்வேறு திருப்பங்களோடு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை, மும்பை போலீஸ் அதிகாரி சச்சின் வேஸ் உள்ளிட்ட பலரை கைது செய்துள்ளது. இந்தநிலையில் இன்று மும்பை போலீஸாரை தொடர்புகொண்ட கால் டாக்சி டிரைவர் ஒருவர், பை வைத்திருந்த இரண்டு நபர்கள் முகேஷ் அம்பானியின் இல்லத்தை கேட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள சிசிடிவி காட்சிகளை மும்பை போலீஸார் சோதனை செய்துள்ளனர். மேலும் துணை ஆணையர் மட்டத்திலான அதிகாரி ஒருவர் நிலைமையை கண்காணித்து வருவதாகவும் மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT