Skip to main content

சமூகத்தில் எளிய மனிதர் என பெயரெடுத்தவருக்கு இந்த அரசு கொடுத்திருக்கும் நிலை வருத்தத்தை தருகிறது- அய்யாசாமி

Published on 11/05/2019 | Edited on 12/05/2019

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு இதுநாள் வரை அரசு ஒதுக்கியிருந்த வீட்டை காலி செய்ய கூறி நோட்டீஸ் விட்டுள்ளதையொட்டி அவர் அரசு ஆணையை மதித்து வீட்டை காலி செய்து, வேறு வாடகை வீட்டிற்கு இடம் பெயர்ந்துள்ளார்.  இந்த செய்தி தமிழக மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.  இந்நிலையில்  அவரது உறவினரும்,நலம்விரும்பியுமான ஐய்யாசாமி கூறுகையில்,

 

nallakannu

 

நல்லகண்ணு ஐயா 2006வது வருடம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு இல்லாமல் கஷ்டப்பட்ட சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திடமிருந்து வாங்கினார். இதுவரை 13 வருடங்கள் ஆகிறது. இவ்வளவு வருடமாக சரியான நேரத்தில் வாடகை செலுத்தி வருகிறார். தண்ணீர் வரி கட்டி வருகிறார். எந்த ஒரு குறையும் அவர் வைக்கவில்லை. இந்த வீட்டுக்காக கிட்டத்தட்ட அவர் 5 லட்சம் வரை செலவு செய்திருக்கிறார். முன் கேட் அமைப்பது காம்பவுண்ட் கட்டுவது போன்ற பணிகளுக்காக செலவு செய்திருக்கிறார். இவருடன் வீடு வாங்கியவர்கள் பாதிப்பேர் வெளியில் சென்று விட்டு வீட்டை வாடகைக்கு விட்டனர்.

 

nallakannu

 

சிலர் வீடுகளை டிராவல்ஸ் ஆஃபீஸாக மாற்றி உபயோகப்படுத்தி வந்தனர். ஆனால் இப்படிப்பட்ட நிலையில் நல்லகண்ணு ஐயா குடும்பத்திற்காக மட்டுமின்றி கட்சிக்காரர்கள், தொண்டர்கள் வந்தால் சந்திப்பதற்கான வீடாக வைத்திருந்தார். வீட்டை காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்த போது அக்கம் பக்கத்தில் இருந்த வீட்டினர் கோர்ட்டில் ஸ்டே  வாங்க கேஸ் போட்டார்கள். ஆனால் நல்லகண்ணு அய்யா மட்டும் அதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவருடைய சொந்த வீடாக இருந்தால் எப்படி இருக்குமோ அதுபோலதான் அந்த வீட்டையும் பார்த்துக் கொண்டார்.

 

nallakannu

 

 

 

nallakannu

 

அவர் ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்பதைவிட சுதந்திர போராட்ட வீரர். அவருக்கு 92 வயதாகிறது இவ்வளவு வருடமாக இருந்து விட்டார். சமூகத்தில் நல்ல ஒரு எளிமையான மனிதர் என பெயரெடுத்தவர் இப்படி இருக்கும் நிலையில் இந்த வீடு நிலம் அரசுக்கு தேவைப்பட்டிருக்கிறது என்றால்  வீட்டு வசதி வாரியத்தின் துணை கொண்டு மாற்று இடத்தை கொடுத்திருக்கலாம். அதை விட்டுவிட்டு வீட்டை காலி செய்யுங்கள் வெளியே போங்கள் என்று கேவலமாக தமிழ்நாடு அரசு நடந்து கொண்டு இருக்கிறது ரொம்ப வருத்தத்தை தருகிறது என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவிற்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
The court asked question for ncb

டெல்லியில் மத்திய போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் தான் என்பது தெரியவந்தது. அதே சமயம் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியானது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி (09.03.2024) கைது செய்யப்பட்டு மத்திய போதைப் பொருள் தடுப்பு போலீசாரின் காவலில் இருந்து வருகிறார். இதற்கிடையே சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டிற்கு மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் சார்பில் சீல் வைக்கப்பட்டது.

இதனையடுத்து ஜாபர் சாதிக்கின் சீல் வைத்த வீட்டை பயன்படுத்த அனுமதிக்க கோரி ஜாபர் சாதிக் வழக்கறிஞர் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (05.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன்?” என மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது. அதற்கு, “சீல் வைத்த வீட்டை பயன்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை” என என்.சி.பி. தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம் ஜாபர் சாதிக் வழக்கறிஞர் தொடர்ந்த மனுவை முடித்து வைத்து பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து விரைவில் வீட்டின் சீல் அகற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.