Skip to main content

பாரம்பரிய விளையாட்டுக்கள், திரைப்படங்கள்... புது மனிதர்களான ஆதரவற்றோர்கள்!!!

Published on 23/04/2020 | Edited on 23/04/2020

கரோனாவில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மக்களின் இயல்பு வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கின்ற அதே வேளையில், சமூக காரணங்களால் வீட்டை விட்டு தெருக்களில் ஆதரவற்று அலைந்து திரிந்த மக்களை, மனிதர்களாக்கியிருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.

  nellai districts film telecast


குடும்ப பிரச்சனை, கணவன் மனைவியை விட்டு பிரிவது அல்லது கணவனை விட்டு மனைவி பிரிவது, பிள்ளைகளின் புறக்கணிப்பு என்பது உள்ளிட்ட பல்வேறு சமூக காரணங்களால் புறக்கணிக்கப்பட்டு சாலையின் ஓரத்தில், பாலத்தின் கீழ், குப்பைத் தொட்டியின் அருகில் அழுக்கு உடையுடன், பீடி உள்ளிட்ட போதைகளின் துணையுடன் வாழ்ந்து வந்த இவர்களின் எண்ணிக்கை நெல்லை மாநகரில் மட்டும் மூன்று இலக்கத்தைத் தொடும். கரோனா நோய் தொற்றால் உலகெங்கும் தனித்திருத்தலை, சமூக விலகலை அடையாளம் காட்டியிருக்க, மக்களை நம்பி மட்டும் வாழ்ந்திருந்த இவர்களுக்குத் தேவையான உணவு கேள்விக்குறியானது.

 

nakkheeran app


 

nellai districts film telecast


இதையறிந்த தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று மாநகராட்சி ஆணையாளர், மாவட்ட ஆட்சியர் உதவியுடன் மார்ச் மாதம் 22, 23, 24 ஆகிய தேதிகளில் சமூக புறக்கணிப்பால் ஆதரவற்றுத் திரியும் இவர்களைக் கண்டறிந்து நெல்லை டவுனில் உள்ள கல்லணை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்தது. இதில் 12 வயது சிறுவன், 16 பெண்கள் மற்றும் 90 ஆண்கள் உள்ளிட்ட 107 நபர்களில் மாற்றுத்திறனாளிகள் மூவரும் அடக்கம். 12 வயது தொடங்கி 85 வயது மூப்புடன் வாழும் இவர்களுக்கு மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் மருத்துவத்துறை உதவியுடன் சுகாதார உதவி வழங்கப்பட்டதோடு மட்டுமில்லாமல், சமூக விலகலை உரக்கக் கூறி மூன்று வேளை சத்தான உணவும், இரு வேளை காபி, டீயுடன் கூடிய தின்பண்டங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

nellai districts film telecast


சீராக முடி வெட்டப்பட்டு, தலை வாரி புறச்சுத்தத்துடன் வாழும் இவர்களுக்குப் பொழுது போக்கே தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான தாயம், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், பகடைக்காய் உள்ளிட்டவைகள். இதில் பலர் அங்கேயே அவர்களுக்காக சமைக்கப்படும் உணவுகளின்போது சமையலர்களின் உதவியாளர்களாகவும், படுத்தப்படுக்கையாக இருக்கும் ஏனைய ஆதரவற்றோர்களுக்கு உதவியாகவும் பணிபுரிந்து, தங்களுடைய முந்தைய நிலையை மறந்து தங்களை தாங்களே தேற்றி வருகின்றனர். முத்தாய்ப்பாக இவர்களது மன அழுத்தத்தை முற்றிலும் குறைக்க புதன்கிழமை இரவில் இவர்கள் தங்கியிருந்த பள்ளி வளாக கலையரங்கில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படமும் திரையிடப்பட்டுள்ளது. 
 

nellai districts film telecast

சமூக விலகலை பின்பற்றி தனித்தனியாக அமர்ந்து திரைப்படத்தினை கைத்தட்டி, விசிலடித்து ரசிக்க, அவ்வப்போது டீயுடன், நொறுக்கு தீனிகளும் உலா வந்திருக்கின்றன. "50 வருஷத்திற்கு முன்பு பார்த்தது.. இப்பத்தான் மீண்டும் பார்க்கின்றேன்." என மகிழ்ந்திருக்கின்றார் 85 வயது பாட்டி ஒருவர். முன்னதாக உள்ளூர் பத்திரிகையாளர் மாரியப்பன் என்பவர், "மன இறுக்கத்திலிருந்து விடுபடுவது எப்படி..?" என உரையாற்றியதும் குறிப்பிடத்தக்கது.

nellai districts film telecast

தனியார் தொண்டு நிறுவன நிர்வாகி சரவணனோ, "மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகமும் இல்லையென்றால் இது சாத்தியமாகாது. இவர்களுக்கு இந்த வேளைதான் உணவு உண்ண வேண்டுமென்பது தெரியாது. கிடைக்கும் போதெல்லாம் உணவு உண்பார்கள். அதுபோக படுக்கும் இடத்தில் கொசு கடிக்கக் கூடாதே என்பதற்காக ஏதாவது ஒரு போதைப் பழக்கத்தை பழகி வைத்திருப்பார்கள். தொடக்கத்தில், "பீடி கொடு..! இல்லைன்னா கொன்னுபுடு" என நச்சரிப்பார்கள். இப்பொழுது அது கிடையாது. குளிக்கிறார்கள்.! சுத்தமாக இருக்கின்றார்கள்.! மூன்று வேளை சாப்பிடுகிறார்கள்.! பாயில்தான் படுக்கின்றார்கள்.! ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கின்றார்கள். 

nellai districts film telecast

அவர்களின் மன அழுத்ததை குறைப்பதற்காக, தற்பொழுது திரையிடல்களை தொடங்கியிருக்கின்றோம். ஊரடங்கு முடிந்து வெளியில் வரும்பொழுது, இவர்களால் பழைய வாழ்க்கையை நினைக்க முடியாது. கூசும்.. ஆதலால் புது மனிதர்களாக உலா வருவார்கள்." என்கிறார் நம்பிக்கையுடன். இவரின்கீழ் நெல்லையில் மட்டுமல்லாது தூத்துக்குடி மற்றும் திருச்சியில் அடைக்கலமாயிருக்கும் ஆதரவற்றோர்களின் எண்ணிக்கை மட்டும் ஏறக்குறைய 220 நபர்கள்.

புதுமனிதர்களை வரவேற்கத் தயாராகுவோம்..!!!
 

சார்ந்த செய்திகள்

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மயிலாடுதுறையில் சிறுத்தை; அம்பாசமுத்திரத்தில் கரடி; வைரலாகும் வீடியோ காட்சிகள்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Leopard in Mayiladuthurai; Bear in Ambasamudra; Videos go viral

கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையை பிடிக்கும் பணியானது ஏழு நாட்களுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், அம்பாசமுத்திரத்தில் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த கரடி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த, நபர் ஒருவரை கரடி துரத்துவதும், அந்த நபர் தலைதெறிக்க ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கும் நிலையில், தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு மலை ஓரத்தில் உள்ள கிராமங்களில் விலங்குகள் தஞ்சம் புகுவது வாடிக்கையாகி வருகிறது.

Leopard in Mayiladuthurai; Bear in Ambasamudra; Videos go viral

இந்த நிலையில் இன்று அதிகாலை கல்லிடைக்குறிச்சி பகுதிக்கு கரடி ஒன்று வந்துள்ளது. அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்த ஒருவர், கரடியைப் பார்த்தவுடன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த அம்பாசமுத்திரம் வனச்சரகர் நித்யா தலைமையிலான வனத்துறையினர் ஊருக்குள் புகுந்த கரடியைத் தேடி வருகின்றனர். பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டு வருகிறது.