அனைத்து கட்சிகளை சேர்ந்த எம்.பி க்களும் ஒன்றிணைந்து விருந்தில் கலந்துகொண்டு நடனமாடி கொண்டாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. தற்போது மத்திய உணவு அமைச்சராக உள்ள ஹர்சிம்ரட் கௌர் பதாலும், முன்னாள் பஞ்சாப் துணை முதல்வர் சுக்பிர் சிங் பதாலும் இணைந்து ஆண்டுதோறும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் விருந்து வைப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருந்து நேற்று மாலை நடைபெற்றது. இதில் எம்.பி க்கள் அனைவரும் கலந்துகொண்டு விருந்து உண்டு பின் நடனமும் ஆடி மகிழ்ந்தனர். பெண் எம்.பி க்களான கனிமொழி, ஸ்மிருதி இராணி, ஹர்சிம்ரட் கௌர் படேல், சுப்ரியா சுலே, அனுப்ரியா படேல் ஆகியோர் இணைந்து நடனமாடியும், விளையாடியும் மகிழ்ந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் மேளமடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இந்த விருந்து நிகழ்ச்சியில் அனைத்து காட்சிகளை சார்ந்த முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர்.