Skip to main content

நாடு முழுவதும் பொதுவேலை நிறுத்தம் வெற்றி பெற்றதா?

Published on 09/01/2020 | Edited on 09/01/2020

மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், முறையற்ற ஜி.எஸ்.டி வரி போன்றவற்றால் தொழில்கள் நசிவு, தொழிலாளர்கள் வேலையிழப்பு போன்றவற்றை கண்டித்து இடதுசாரிகள், காங்கிரஸ், திமுக என அனைத்து மாநில தொழிற்சங்கங்களும் ஜனவரி 8ந்தேதி பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தன. அதனை பல மாநிலத்தில் உள்ள எதிர்கட்சிகள் ஏற்றுக்கொண்ட நிலையில் சில மாநிலங்களில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.

 

 dmk and Congress protest

 



இதனால் ஜனவரி 8ந்தேதி நடைபெற்ற பொதுவேலை நிறுத்தம் பிசுபிசுத்தது. பேருந்துகள், ஆட்டோக்கள், லாரிகள் உட்பட வாகனங்கள் 80 சதவிதம் வழக்கம் போல் இயங்கின. கடைகள் திறந்து இருந்தன. தமிழகத்தில் அரசு ஊழியர்கள் பெரும்பாலும் இந்த பொது வேலை நிறுத்தத்தில் கலந்துக்கொள்ளவில்லை.

தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், விசிக என பல கட்சிகளும் இந்த பொதுநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து மத்திய மாநில அரசுகளை எதிர்த்து நடந்த ஊர்வலத்தில் அக்கட்சிகளின் தொழிற்சங்கங்கள் கலந்துக்கொண்டு தங்களது கண்டன குரல்களை எழுப்பி, கைதாகின. இருந்தும் பெரியளவில் வெற்றி பெறாததுக்கு காரணம், தொடர்ச்சியாக மத்தியரசை கண்டித்து குடியுரிமை திருத்த சட்டம், மக்கள் கணக்கெடுப்பு சட்டம் போன்றவற்றுக்காக எதிர்கட்சிகள் போராடியுள்ளன.

இதனால் பல தரப்பிலும் சிறு குறு தொழில்கள் பாதிப்புகள் உள்ளன. அதோடு பொங்கல் பண்டிகை வருகிறது, தமிழகத்தில் பொங்கல், ஆந்திரா – தெலுங்கானாவில் சங்கரந்தி என ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பெயரில் கொண்டாட்டம் தொடங்கவுள்ளது. வியாபார நேரம். இந்நிலையில் பொதுவேலை நிறுத்தம் செய்தால் பாதிப்பு என்பதால் இந்த பொது வேலை நிறுத்தத்தில் கட்சிகள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.

 



இதனை அறிந்தே நாடு முழுவதும் 12 முதல் 12.10 வரை வாகனங்களை இயக்காமல் நிறுத்தி பொதுவேலை நிறுத்தத்துக்கு பொதுமக்கள் ஒத்தொழைப்பு தர வேண்டும் என போராட்ட ஒருங்கிணைந்த அமைப்புக்குழு வேண்டுக்கோள் விடுத்தது. அதன்படி இந்தியாவில் 90 சதவிகித இடங்களில் அந்த நேரத்தில் வாகனங்கள் இயக்காமல் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

திருவண்ணாமலை நகரில் மத்திய பேருந்து நிலையம் அருகே இடதுசாரி கட்சிகள், திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக போன்ற கட்சிகளின் தொழிற்சங்களின் சார்பில் ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்துக்கொண்டு 12 மணிக்கு மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மத்தியில் ஆளும் பாஜக அரசையும், மாநிலத்தை ஆளும் அதிமுக அரசுகளை கண்டித்து குரல் எழுப்பி ஊர்வலம் சென்றவர்களை போலீஸார் மடக்கி கைது செய்தனர்.

வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், எல்.ஐ.சி, தபால் நிலையம், மத்திய மாநில அரசுகளின் பெல் நிறுவனம் உட்பட பல தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர்கள், ஊழியர்கள் செல்லாததால் அந்த செக்டார் 80 சதவிகிதம் பொது வேலை நிறுத்தம் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அரசாங்கத்துக்கு பல்லாயிரம் கோடி நட்டம் என்பதும் குறிப்பிடதக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.