ADVERTISEMENT
ADVERTISEMENT
தொடர்ச்சியாக மதுபானக் கடைக்குள் புகுந்து மதுபானங்களைத் திருடி குடித்து வந்த குரங்கை பிடிக்கும் முயற்சியில் வனத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் சம்பவம் உத்திரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அசால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மதுக்கடை ஒன்றில் புகுந்த குட்டி குரங்கு ஒன்று அங்குள்ள டின் பியரை திருடி குடிக்கும் வீடியோக்கள் வெளியாகி இருந்தது. இப்படி அடிக்கடி மதுக்கடையில் புகுந்து மதுபாட்டில்களைத் திருடி குரங்கு குடிப்பதாக மதுக்கடை ஊழியர்கள் புகார் தெரிவித்த நிலையில் வனத்துறை உதவியுடன் அக்குரங்கைப் பிடிக்க திட்டமிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகளில் வனத்துறை இறங்கியுள்ளது. டின் பியரை உடைத்து குரங்கு அருந்தும் அந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Show comments