Skip to main content

குடித்துவிட்டு ரகளை செய்த கணவன்; கொதிக்கும் தண்ணீரில் மிளகாய்ப்பொடி கலந்து ஊற்றிய மனைவி

Published on 16/03/2023 | Edited on 16/03/2023

 

Drunken husband; Wife who mixed chili powder with boiling water

 

குடிபோதையில் ரகளை செய்த கணவன் மீது மனைவியும் மாமியாரும் சுடு தண்ணீரில் மிளகாய்ப் பொடியை கலந்து ஊற்றியதில் கணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.

 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பாரதிபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி டயானா மேரி. இந்த தம்பதிக்கு தற்பொழுது வரை குழந்தை இல்லாத நிலையில் செல்வராஜ் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அதேபோல் தொடர்ந்து குடிப்பழக்கம் கொண்டவராக இருந்ததால் அடிக்கடி கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த தகராறு காரணமாக டயானா மேரி அவரது பெற்றோர் வீட்டிற்குச் சென்று விட்டார்.

 

இந்நிலையில், சமீபத்தில் செல்வராஜ் தனது மனைவி மேரியை அனுப்பி வைக்கும்படி மாமியார் வீட்டிற்கு போதையில் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்பொழுது மேரியை செல்வராஜ் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டயானா மேரி வீட்டில் கொதித்துக் கொண்டிருந்த தண்ணீரில் மிளகாய்ப் பொடியை கலந்து கணவர் செல்வராஜ் மீது ஊற்றியுள்ளார். அலறித் துடித்த செல்வராஜை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த செல்வராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் செல்வராஜ் மனைவியான மேரி மற்றும் அவரது மாமியார் இன்னாசியம்மாள் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.