இதனையடுத்து இன்று காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை நடைபெறுவதாக அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்டப்பிரிவு 370 ஐ நீக்கும் மசோதாவை தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து காரசாரமாக இதுகுறித்த விவாதம் அங்கு நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலயில் அமித்ஷா விவாதத்தில் பேசும்போது, “காஷ்மீர் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் முடிவெடுக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை. ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை மாற்ற முடியாது; இது அரசியல் ரீதியான நகர்வு அல்ல. பாகிஸ்தான் மற்றும் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் பகுதிகள் இந்தியாவுக்குச் சொந்தமானது. ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை மீட்க என் உயிரையும் கொடுக்கத் தயார். ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியே; காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. தலையிட காங். விரும்புகிறதா?. " என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களிடம், வாதங்களை அவையில் முன்வைக்கலாம், விதண்டா வாதம் செய்ய வேண்டாம் என்று கடுமையாக பேசியுள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.