ADVERTISEMENT

வங்கிகளில் டெபாசிட் வட்டி விகிதம் அதிகரிப்பு!

06:39 PM Jun 22, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி அங்கீகரித்த நிலையில், வங்கிகள் வாடிக்கையாளர்களின் டெபாசிட் வட்டி விகிதத்தையும் உயர்த்தியுள்ளனர்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி 36 நாட்களில் இரண்டு முறையாகக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.9% அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, வீடு, வாகன, தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் உயர்த்தியுள்ளன. அதேநேரம், வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தியாக, அவர்கள் வங்கியில் வைத்திருக்கும் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களும் 6% வரை உயர்த்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, சாதாரண மக்களின் டெபாசிட் வட்டி விகிதத்தை 2.90% முதல் 5.50% வரை உயர்த்தியுள்ளது. மூத்த குடிமக்களின் டெபாசிட்களுக்கு 6.30% வட்டி வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதேபோல், பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கிகளும், தனியார் வங்கிகளில் ஹெச்டிஎஃப்சி கோட்டக் மஹிந்திரா உள்ளிட்ட வங்கிகளும் டெபாசிட் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT