மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் ரத்தன் டாடாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிய இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி, ரத்தன் டாடாவின் கால்களை தொட்டு வணங்கிய நிகழ்வு தொழில் உலகில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
மும்பையில் டைகான் அமைப்பு சார்பில் நடைபெற்ற 11 ஆண்டு விருது வழங்கும் விழாவில் ரத்தன் டாடாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருதினை நாராயணமூர்த்தி ரத்தன் டாடாவிற்கு வழங்கினார். விருதை வழங்கிய அவர் திடீரென ரத்தன் டாடாவின் கால்களில் விழுந்து வணங்கினார். நாராயணமூர்த்தியின் இந்த செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது எனலாம். விருது வழங்கும் விழாவில் நடைபெற்ற இந்த நிகழ்வு தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Show comments