Skip to main content

வயலில் கட்டிப்புரண்ட ஆசிரியர்கள்; வைரலான வீடியோவில் அதிர்ச்சி

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

Field-bound teachers; Shocked that the bihar teachers video went viral

 

பீகாரில் பள்ளியின் முதல்வருக்கும் சக ஆசிரியைக்கும் இடையே நடந்த வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் கௌரியா பகுதியில் உள்ள பிஹ்தா நடுநிலைப்பள்ளியின் முதல்வர் காந்தி குமாரி. ஆசிரியராக அனிதா குமாரி என்பவர் பணிபுரிகிறார். இந்நிலையில் இருவருக்கும் பள்ளியில் இருந்த ஜன்னலை மூடுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. மாணவர்கள் முன்னிலையில் அனிதாகுமாரியை முதல்வர் காந்தி குமாரி கண்டித்துள்ளார்.

 

வாக்குவாதம் முடிந்து பள்ளியின் வகுப்பறையில் இருந்து முதல்வர் வெளியேற அவருக்கு பின்னால் வேகமாக சென்ற ஆசிரியர் அனிதா குமாரி தான் அணிந்திருந்த செருப்பால் அவரை தாக்கினார். இருவரும் சண்டையிடுவதை கண்ட மற்றொரு ஆசிரியை வேகமாக வந்து அனிதா குமாரியுடன் இணைந்து முதல்வரை தாக்கியுள்ளார். வகுப்பறையில் ஆரம்பித்து வகுப்பறைக்கு வெளியே வயல்வெளி வரை இச்சண்டை நீடித்தது. மூவரும் சண்டையிட்டுக்கொள்வதை வேடிக்கை பார்த்தோர் வீடியோ எடுத்துள்ளனர். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. 

 

இச்சம்பவம் குறித்து அப்பகுதி கல்வி அதிகாரியிடம் கேட்ட போது, பள்ளியில் கைகலப்பு நடந்ததை உறுதி செய்துள்ளார். முதல்வருக்கும் ஆசிரியருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக இச்சம்பவம் நடைபெற்றதாகவும் இது அரசு விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறிய செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இரு ஆசிரியர்களும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 ஹோட்டலில் பயங்கர தீ விபத்து; 6 பேர் பலியான சோகம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Incident happened 6 people for Terrible fire at hotel in patna

பீகார் மாநிலம், பாட்னா சந்திப்பு ரயில் நிலையம் அருகே தனியார் அடுக்குமாடி ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஹோட்டலில் இன்று (25-04-24) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த சிலர் சிக்கினர். இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு அங்கு ஏற்பட்டிருந்த தீயை அணைத்து, கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தப் பயங்கர தீ விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், அங்கு படுகாயமடைந்திருந்த 20க்கும் மேற்பட்டவர்களை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்தத் தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.