Skip to main content

பசும்பாலில் தங்கம் உள்ளதால் தான் அது வெளிர் நிறத்தில் இருக்கிறது - பாஜக பிரமுகர் பேச்சு!

Published on 05/11/2019 | Edited on 05/11/2019

பசும்பாலில் தங்கம் இருக்கிறது என மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அவர் பேசியபோது, " சிலர் அதிகம் படித்தவர்கள் என்று பெருமை பேசிக் கொண்டு ரோட்டோர கடைகளில் மாட்டிறைச்சி சாப்பிடுகின்றனர். ஏன் பசுமாட்டிறைச்சி சாப்பிடுகிறீர்கள்? நாய்க்கறி கூட சாப்பிடலாமே, அதுவும் உடலுக்கு நல்லதுதானே? நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். அதை உங்களின் வீட்டுக்குளிள் செய்யுங்கள். பசுமாடு எங்களின் தெய்வம். அதனை அவமதிப்பதை, கொல்வதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. நாட்டுப் பசும்பாலில் தங்கம் இருக்கிறது. அதனாலேயே அது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. நாட்டுப் பசுமாட்டின் காம்பில் சூரியஒளி படும்போது பாலில் தங்கம் உருவாகும்.
 

df


இந்தியா கிருஷ்ணரின் பூமி. இங்கு நாங்கள் பசுவை மதிக்கிறோம். இனியும் அப்படித்தான் இருப்போம். பசுவதை பெருங்குற்றம். குழந்தைகள் தாய்ப்பாலுக்குப் பின்னர் பசும் பாலையே குடிக்கின்றனர். தாயாக விளங்கும் பசுவை வதை செய்தால் எப்படிப் பொறுப்பது. மேலும், சிலர் வெளிநாட்டுப் பசுக்களை வளர்க்கின்றனர். வெளிநாட்டுப் பெண்களைத் திருமணம் செய்தால் சிக்கல் வருவதுபோல் வெளிநாட்டுப் பசுக்களாலும் சிக்கல் வரும் " எனக் கூறினார். திலீப் கோஷ் அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை பேசி விமர்சனத்துக்கு உள்ளாவார். சில வாரங்களுக்கு முன்னர் மேற்கு வங்க காவல்துறையை பற்றி தவறான கருத்தை பேசியதற்காக கண்டனத்திற்கு உள்ளானார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.