வடமாநிலங்களில் குளிர் வாட்டி வதைக்கும் நிலையில், மக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். லடாக் தலைநகர் லேயில் -12 டிகிரி என்ற அளவில் உறையவைக்கும் குளிர் நிலவுகிறது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பல பகுதிகளில் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகளுக்கு சாலையே தெரியாத நிலை ஏற்பட்டது. லக்னோவில் உள்ள விலங்கியல் பூங்காவில் விலங்குகள் குளிரில் நடுங்காமல் இருக்க ஹீட்டர் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் பனிப்பொழிவு கடுமையாக இருக்கும் நிலையில், மற்றொருபுறம் காற்று மாசும் தொடர்ந்து மோசமான நிலையிலேயே நீடித்துவருகிறது. அதேபோல், அசாம் மாநிலம் காசிரங்காவில் உள்ள வனவிலங்குகள் மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையத்தில் உள்ள குட்டி யானைகள் குளிரால் அவதிப்படும் நிலையில், அவற்றின் முதுகில் கம்பளி வைத்து கட்டப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் நாளுக்கு நாள் குளிர் அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.