திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரில் உள்ள இஸ்லாமியர்கள், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடி மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் கணக்கெடுப்பு ஆகிய சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

DELHI SHAHEEN BAGH TIRUPATTUR VANIYAMBADI PEOPLES

டெல்லியில் நடப்பது போல தொடர் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். ஷாஹீன் பாக் என்கிற பெயரில் நடைபெறும் இந்த போராட்டம் வாணியம்பாடி நகரில் உள்ள ஆற்றுமேடு என்கிற பகுதியில் பிப்ரவரி 19- ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 20- ஆம் தேதி இரண்டாவது நாளாக மத்தியில் ஆளும் பாஜகவின் மோடி அரசுக்கு எதிராக வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியபடி பெண்கள் உட்பட 100- க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பகல் இரவு என பார்க்காமல்இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.